முதல்வர் வேடத்தில் நடிக்கும் திரிஷா-கன்னடம், தமிழில் உருவாகிறது
திரிஷா விரைவில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஒரு புதிய கன்னடப் படத்தில். இந்தப் படத்தை தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்குகிறார்கள்.
சிஎம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முற்றிலும் அரசியல் படமல்ல. மாறாக அழகான காதல் கதைதான். இருப்பினும் இதில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கப் போகிறார் என்று பரவியுள்ள தகவலால் எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.
இந்தப் படத்தை கன்னடத்திலும், தமிழிலும் உருவாக்குகிறார்கள். முதலில் இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநரும், தயாரிப்பாளரும் அணுகியது அனுஷ்காவைத்தான். அவரது அசத்தலான உயரமும், வசீகரமான முகமும் இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என நம்பி அனுஷ்காவை நம்பினர். ஆனால் அவருக்கு டேட்ஸ் பிரச்சினை இருந்ததால், அனுஷ்காவை புக் செய்ய முடியாமல் போய் விட்டதாம்.
இதையடுத்தே திரிஷாவை அணுகினர். நான் டப்பு ஜாஸ்தி கேட்பேனே என்று திரிஷா கூறியுள்ளார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர், நீங்க நடிச்சே ஆகணும் என்று கூறியுள்ளனராம். யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டுள்ளாராம் திரிஷா. அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையில் சிஎம் படக் குழு உள்ளது.
திரிஷா ஏற்கனவே இந்தியில் கத்தா மீத்தா படத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோக்கள். கன்னடப் பதிப்பில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். தமிழ்ப் பதிப்புக்கு அர்ஜூன் நாயகனாம்.
இப்படம் குறித்து இயக்குநர் ரகுராம் கூறுகையில், இப்படத்தின் தலைப்புதான் சிஎம். மற்றபடி இதில் அரசியல்ஏதும் இல்லை. இரு முதல்வர்களுக்கிடையே ஏற்படும் காதலை இப்படத்தில் கதையாக்கியுள்ளோம் என்றார்.
தமிழக, கர்நாடக மாநிலங்களின் அரசியல் உறவுகளையும், மக்கள் உறவுகளையும் பலப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
திரிஷா விரைவில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ஒரு புதிய கன்னடப் படத்தில். இந்தப் படத்தை தமிழிலும் ஒரே சமயத்தில் உருவாக்குகிறார்கள்.
சிஎம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முற்றிலும் அரசியல் படமல்ல. மாறாக அழகான காதல் கதைதான். இருப்பினும் இதில் முதல்வர் வேடத்தில் திரிஷா நடிக்கப் போகிறார் என்று பரவியுள்ள தகவலால் எதிர்பார்ப்பு ஏகமாகியுள்ளது.
இந்தப் படத்தை கன்னடத்திலும், தமிழிலும் உருவாக்குகிறார்கள். முதலில் இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநரும், தயாரிப்பாளரும் அணுகியது அனுஷ்காவைத்தான். அவரது அசத்தலான உயரமும், வசீகரமான முகமும் இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருக்கும் என நம்பி அனுஷ்காவை நம்பினர். ஆனால் அவருக்கு டேட்ஸ் பிரச்சினை இருந்ததால், அனுஷ்காவை புக் செய்ய முடியாமல் போய் விட்டதாம்.
இதையடுத்தே திரிஷாவை அணுகினர். நான் டப்பு ஜாஸ்தி கேட்பேனே என்று திரிஷா கூறியுள்ளார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை டாக்டர், நீங்க நடிச்சே ஆகணும் என்று கூறியுள்ளனராம். யோசிக்க கொஞ்சம் டைம் கொடுங்க என்று கேட்டுள்ளாராம் திரிஷா. அவர் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையில் சிஎம் படக் குழு உள்ளது.
திரிஷா ஏற்கனவே இந்தியில் கத்தா மீத்தா படத்தில் பொதுப்பணித்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோக்கள். கன்னடப் பதிப்பில் சிவராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். தமிழ்ப் பதிப்புக்கு அர்ஜூன் நாயகனாம்.
இப்படம் குறித்து இயக்குநர் ரகுராம் கூறுகையில், இப்படத்தின் தலைப்புதான் சிஎம். மற்றபடி இதில் அரசியல்ஏதும் இல்லை. இரு முதல்வர்களுக்கிடையே ஏற்படும் காதலை இப்படத்தில் கதையாக்கியுள்ளோம் என்றார்.
தமிழக, கர்நாடக மாநிலங்களின் அரசியல் உறவுகளையும், மக்கள் உறவுகளையும் பலப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment