ஹைதராபாத்: உறவினர்கள் பலரும் அரசியல் பதிவிகளை அனுபவித்துக் கொண்டிருக்க, முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா மட்டும் சும்மா இருப்பாரா... அவரும் தேர்தலில் குதிக்கிறார். தெலுங்கு தேசம் சார்பில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிடுகிறார்.
ஆந்திர மாநில சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் இப்பொழுதே தயாராகி வருகின்றன.சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா போட்டியிட உள்ளார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.
இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகன். சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர். பாலகிருஷ்ணா அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் சினிமாவில அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தி வரும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அதன் தலைவர் சந்திரபாபுநாயுடு திட்டம் வகுத்துள்ளார். இதன்படி தேர்தல் பிரசாரத்திலும், வேட்பாளர்கள் தேர்விலும் பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பால கிருஷ்ணாவை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கவும் முடிவாகி உள்ளது. இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக இனி நானும் தீவிரமாக களமிறங்கப் போகிறேன். ஆந்திராவில் கட்சியை பலப்படுத்த என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளேன். கட்சி மேலிடம் சொல்லும் இடத்தில் நிற்பேன்," என்றார்.
ஆந்திர மாநில சட்ட சபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முக்கிய கட்சிகள் இப்பொழுதே தயாராகி வருகின்றன.சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணா போட்டியிட உள்ளார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறப்பட்டு வந்தது.
இவர் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் மகன். சந்திரபாபு நாயுடுவின் மைத்துனர். பாலகிருஷ்ணா அரசியலில் தீவிர ஆர்வம் காட்டாமல் சினிமாவில அதிக கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது ஆந்திர அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தி வரும் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க அதன் தலைவர் சந்திரபாபுநாயுடு திட்டம் வகுத்துள்ளார். இதன்படி தேர்தல் பிரசாரத்திலும், வேட்பாளர்கள் தேர்விலும் பிரபலங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பால கிருஷ்ணாவை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கவும் முடிவாகி உள்ளது. இதற்கு அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாலகிருஷ்ணா கூறுகையில், "தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக இனி நானும் தீவிரமாக களமிறங்கப் போகிறேன். ஆந்திராவில் கட்சியை பலப்படுத்த என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளேன். கட்சி மேலிடம் சொல்லும் இடத்தில் நிற்பேன்," என்றார்.
No comments:
Post a Comment