ப்ரியங்கா சோப்ரா மாதிரி அழகாக இருக்கிறீர்கள் என்று நடிகை அமலா பாலை பாராட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.
பொதுவாக இரு நடிகைகள் சினேகமாக இருப்பது அபூர்வமான விஷயமாகிவிட்டது சினிமாவில். அதிலும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வது மிக அரிதான விஷயமாகிவிட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியான அமலா பால் புகைப்படங்களைப் பார்த்த நயன்தாரா, "உங்கள் தோற்றம் அசத்தலாக உள்ளது. அப்படியே பிரியங்கா சோப்ராவை பார்ப்பது போல உள்ளது," என்று எஸ்எம்எஸ் அனுப்பினாராம்.
இதில் நெகிழ்ந்துபோன அமலாபால், "நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த (மலையாளப் பெருமையாம்!) நயன்தாரா, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் வாயால் என்னைப் பாராட்டிதை பல விருதுகளைப் பெற்றதற்கு சமமான உணர்கிறேன். அவர்தான் இனி எனக்கு முன்னோடி," என்றார்.
நடிப்பில் மட்டும் முன்னோடியா எடுத்துக்கங்க... அதான் நல்லது!
பொதுவாக இரு நடிகைகள் சினேகமாக இருப்பது அபூர்வமான விஷயமாகிவிட்டது சினிமாவில். அதிலும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வது மிக அரிதான விஷயமாகிவிட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பத்திரிகையில் வெளியான அமலா பால் புகைப்படங்களைப் பார்த்த நயன்தாரா, "உங்கள் தோற்றம் அசத்தலாக உள்ளது. அப்படியே பிரியங்கா சோப்ராவை பார்ப்பது போல உள்ளது," என்று எஸ்எம்எஸ் அனுப்பினாராம்.
இதில் நெகிழ்ந்துபோன அமலாபால், "நயன்தாராவை நினைத்தால் எனக்குப் பெருமையாக உள்ளது. எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த (மலையாளப் பெருமையாம்!) நயன்தாரா, ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். அவர் வாயால் என்னைப் பாராட்டிதை பல விருதுகளைப் பெற்றதற்கு சமமான உணர்கிறேன். அவர்தான் இனி எனக்கு முன்னோடி," என்றார்.
நடிப்பில் மட்டும் முன்னோடியா எடுத்துக்கங்க... அதான் நல்லது!
No comments:
Post a Comment