பிரபுதேவா - நயன்தாரா இருவரும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர். 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
நயன்தாரா திருமணம் ஆகாதவர். அவரை திருமணம் செய்துகொள்வதற்காக, பிரபுதேவா மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். "எனக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்'' என்று அறிவித்தார்.
இந்த நிலையில், பிரபுதேவா தனது குழந்தைகள் இருவரையும் வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சுற்றிக்காண்பித்தார். இது, நயன்தாராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அவரைத்தேடி கேரளாவுக்கு வந்த பிரபுதேவாவை வீட்டுக்குள் வரவிடாமல், கதவை பூட்டிக்கொண்டார். பிரபுதேவா 2 மணி நேரம் வாசலிலேயே காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்த சம்பவம் தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
"எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் பிரிய மாட்டேன்.
எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதுசு அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக, எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்.''
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
நயன்தாரா திருமணம் ஆகாதவர். அவரை திருமணம் செய்துகொள்வதற்காக, பிரபுதேவா மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். "எனக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்கும்'' என்று அறிவித்தார்.
இந்த நிலையில், பிரபுதேவா தனது குழந்தைகள் இருவரையும் வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று சுற்றிக்காண்பித்தார். இது, நயன்தாராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அவரைத்தேடி கேரளாவுக்கு வந்த பிரபுதேவாவை வீட்டுக்குள் வரவிடாமல், கதவை பூட்டிக்கொண்டார். பிரபுதேவா 2 மணி நேரம் வாசலிலேயே காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்த சம்பவம் தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
"எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் பிரிய மாட்டேன்.
எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதுசு அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காக, எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்.''
இவ்வாறு நயன்தாரா கூறினார்.
No comments:
Post a Comment