பூர்ணா புதுப் பூரிப்புடன் புதுப் பாய்ச்சல் காட்டத் தயாராகி வருகிறாராம். தற்போது கன்னடத்தில் நடித்து வரும் அவர் விரைவில் தமிழில் ஒரே சமயத்தில் 2 படங்களில் நடிக்கப் போகிறார்.
தமிழில் அறிமுகமான பூர்ணா இன்னும் பெரிய ஸ்டார் ரேஞ்சைப் பெறாமலேயே உள்ளார். அதற்கான முயற்சிகளை அவர் எடுப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அங்கும் இங்குமாக அவருக்கும் படங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது ராதிகாஜி கண்டா (ராதிகா மேடத்தின் புருஷன்) என்ற கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா விரைவில் தமிழுக்கு வருகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் நான் தமிழுக்கு வருகிறேன். கருவாச்சி, என்ன சொல்லப் போகிறாய் ஆகிய படங்கள்தான் அவை.
கருவாச்சியில் எனக்கு அருமையான கேரக்டர். கிராமத்துப் பெண்ணாக இதில் நடிக்கிறேன். அகில்தான் இதில் நாயகன். எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இதில். எனவே இந்தப் படம் எனக்கு பெரிய பிரேக்காக இருக்கும் என நம்புகிறேன்.
என்ன சொல்லப் போகிறாய் படத்தில் சக்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இதிலும் எனக்கு முக்கியமான பாத்திரம்தான். அழகிய படம் இது. ரசிகர்கள் இப்படத்தை மட்டுமல்லாமல் என்னையும் வெகுவாக ரசிப்பார்கள்.
இதுவரை நான் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் வரப் போகிற இந்த இரண்டு படங்கள் மூலம் அதை நான் செய்வேன் என்றார் பூர்ணா.
தமிழில் அறிமுகமான பூர்ணா இன்னும் பெரிய ஸ்டார் ரேஞ்சைப் பெறாமலேயே உள்ளார். அதற்கான முயற்சிகளை அவர் எடுப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அங்கும் இங்குமாக அவருக்கும் படங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இப்போது ராதிகாஜி கண்டா (ராதிகா மேடத்தின் புருஷன்) என்ற கன்னடப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா விரைவில் தமிழுக்கு வருகிறாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் நான் தமிழுக்கு வருகிறேன். கருவாச்சி, என்ன சொல்லப் போகிறாய் ஆகிய படங்கள்தான் அவை.
கருவாச்சியில் எனக்கு அருமையான கேரக்டர். கிராமத்துப் பெண்ணாக இதில் நடிக்கிறேன். அகில்தான் இதில் நாயகன். எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இதில். எனவே இந்தப் படம் எனக்கு பெரிய பிரேக்காக இருக்கும் என நம்புகிறேன்.
என்ன சொல்லப் போகிறாய் படத்தில் சக்தியுடன் இணைந்து நடிக்கிறேன். இதிலும் எனக்கு முக்கியமான பாத்திரம்தான். அழகிய படம் இது. ரசிகர்கள் இப்படத்தை மட்டுமல்லாமல் என்னையும் வெகுவாக ரசிப்பார்கள்.
இதுவரை நான் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்கலாம். ஆனால் வரப் போகிற இந்த இரண்டு படங்கள் மூலம் அதை நான் செய்வேன் என்றார் பூர்ணா.
No comments:
Post a Comment