டல்லஸ்: 'சென்னை உதவும் கரங்கள்' அமைப்புக்கு நிதியுதவி செய்வதற்காக அமெரிக்காவில் 'ஹார்மொனி அன் லிமிட்டெட்' இசை நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் தமிழ் அமைப்புகள் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஹரியுடன் நான்' (ஜெயா டிவி) புகழ் 'ஹார்மொனி அன்லிமிட்டெட்' குழுவினரின் இந்த கச்சேரியை நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரவாரத்துடன் ஆரம்பமான இன்னிசை மழை, மணிக்கு அரங்கம் நிறைந்த கூட்டத்துடன் இரவு 7 மணி வரை நடந்தது.
750 இருக்கைகள் கொண்ட க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்திற்கு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே விற்று விட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் பிறந்த சிறுவர் சிறுமிகள் சரியான உச்சரிப்போடு தெள்ளத் தெளிவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பார்வையாளார்களைப் பரவசப்படுத்தியது.
திரை இசை கலைஞர்கள் மணி, நவீன் மற்றும் வெங்கட் இசையமைப்பில், ஹரியுடன் நான் புகழ் ரவிசங்கர், கோபால கிருஷ்ணன், நிரஞ்சன், லஷ்மி, பார்கவி, சரண்யா பாடல்களை பாடினர்.
டிக்கெட்டுகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்பாக 43 ஆயிரம் டாலருக்கான காசோலையை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பில் ராமன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு அவர்கள், யு.எஸ். உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி டாக்டர். பத்மினியிடம் வழங்கினார்கள்.
முன்னதாக உதவும் கரங்கள் அமைப்பின் சேவையை விவரிக்கும் ஒலி ஒளி காட்சியும், சென்னையில் இரண்டு மாதம் தங்கியிருந்து சேவை செய்து வந்த செல்வி ரம்யாவின் உரையும் பார்வையாளர்களின் நெஞ்சை உருக்கியது.
டல்லாஸ் தமிழ் நேரம் ரேடியோவின் ஹேமா மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
டல்லாஸ் வாழ் தமிழர்களுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பெரிய வாய்ப்பாக இந்த இசைக்கச்சேரி அமைந்திருந்த்து.
நிகழ்சிக்கான ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன், மெட்ரோப்லக்ஸ் தமிழ் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள், தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தார்கள்.
தகவல்: ஆர் தினகர்,
புகைப்படம்: முத்துக்குமார் ராமலிங்கம்
டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டல்லாஸ் நகரில் தமிழ் அமைப்புகள் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஹரியுடன் நான்' (ஜெயா டிவி) புகழ் 'ஹார்மொனி அன்லிமிட்டெட்' குழுவினரின் இந்த கச்சேரியை நடத்தினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணிக்கு ஆரவாரத்துடன் ஆரம்பமான இன்னிசை மழை, மணிக்கு அரங்கம் நிறைந்த கூட்டத்துடன் இரவு 7 மணி வரை நடந்தது.
750 இருக்கைகள் கொண்ட க்ரான்வில் ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்திற்கு, டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே விற்று விட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் பிறந்த சிறுவர் சிறுமிகள் சரியான உச்சரிப்போடு தெள்ளத் தெளிவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடியது பார்வையாளார்களைப் பரவசப்படுத்தியது.
திரை இசை கலைஞர்கள் மணி, நவீன் மற்றும் வெங்கட் இசையமைப்பில், ஹரியுடன் நான் புகழ் ரவிசங்கர், கோபால கிருஷ்ணன், நிரஞ்சன், லஷ்மி, பார்கவி, சரண்யா பாடல்களை பாடினர்.
டிக்கெட்டுகள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்பாக 43 ஆயிரம் டாலருக்கான காசோலையை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பில் ராமன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு அவர்கள், யு.எஸ். உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி டாக்டர். பத்மினியிடம் வழங்கினார்கள்.
முன்னதாக உதவும் கரங்கள் அமைப்பின் சேவையை விவரிக்கும் ஒலி ஒளி காட்சியும், சென்னையில் இரண்டு மாதம் தங்கியிருந்து சேவை செய்து வந்த செல்வி ரம்யாவின் உரையும் பார்வையாளர்களின் நெஞ்சை உருக்கியது.
டல்லாஸ் தமிழ் நேரம் ரேடியோவின் ஹேமா மோகன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
டல்லாஸ் வாழ் தமிழர்களுக்கு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பெரிய வாய்ப்பாக இந்த இசைக்கச்சேரி அமைந்திருந்த்து.
நிகழ்சிக்கான ஏற்பாட்டை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன், மெட்ரோப்லக்ஸ் தமிழ் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள், தமிழ் பள்ளிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தார்கள்.
தகவல்: ஆர் தினகர்,
புகைப்படம்: முத்துக்குமார் ராமலிங்கம்
No comments:
Post a Comment