இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களிலும், ரோடுகளிலும் ஓட்டம் பிடித்தனர். பூகம்பம் காரணமாக வான் நகர், எர்சிஸ் பகுதிகளில் பல கட்டிடங்கள் மற்றும் வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாயின. சாலைகளும் சேதம் அடைந்தன. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வான் நகரில் மட்டும் 80 கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.
அங்குள்ள காசிம் காராபிகிர் தெருவில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டிடம் முற்றிலும் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது. பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் மொத்தம் 1000 கட்டிடங்கள் இடிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. பூகம்பத்தில் கட்டிடங்கள் இடிந்ததை தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி 217 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
வான் நகரில் மட்டும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1090 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு முன்பு 138 பேர் பலியானதாகவும், 350 பேர் காயம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 1000 கட்டிடங்கள் இடிந்ததால் இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கி உயிருக்கு போராடி வருகின்றனர்.
தங்களை காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்புகின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. அதில் ராணுவ வீரர்கள் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மணல் வாரி எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் சிறிய மின் விளக்குகளை எடுத்து சென்று இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்கள் அடையாளம் கண்டுபிடித்து மீட்கப்பட்டு வருகின்றனர். பூகம்பம் பற்றிய தகவல் அறிந்ததும் துருக்கி பிரதமர் எர்டோகன் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு வான்நகருக்கு விரைந்து சென்றார்.
மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினார். காயம் அடைந்தவர்கள் மெடிக்கல் வசதி உடைய ஹெலிகாப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பூகம்பம் பாதித்த பகுதிகளில் 2 கூடாரங்களில் தற்காலிக ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு அங்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். பூகம்பம் ஏற்பட்ட பகுதி மலைகளால் சூழப்பட்டது. எனவே இங்கு கட்டப்பட்டிருந்த வீடுகள் பலமிழந்து இருந்தன. மேலும் இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலும் குர்த் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
பொதுவாக துருக்கி பூகம்ப அபாய பகுதியில் உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு மக்கள் தொகை மிகுந்த வடமேற்கு பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதில் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1976-ம் ஆண்டு வான் மாகாணத்தில் உள்ள கால்டிரன் நகரத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் 3840 பேர் பலியாகினர்.
No comments:
Post a Comment