ஜ.நா பொது செயலாளருடனான சந்திப்புக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவில் இருந்து அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் தூக்கி வீசப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தவாரம் ஜ.நா செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளின் அழைப்பின் பேரில் வெளிநாடுகளுக்குப் பயணமாகின்றனர்.
இந்தக் குழுவில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக தலைவர் சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்புக்குள் பின்கதவால் நுழைந்து பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற்ற சுமந்திரன் ஆகியோர் உள்ளடக்கபட்டுள்ளனர்.
இத்துடன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பாக ஒரு பாராளுமன்ற கதிரையைக் கைப்பற்றிய சுரேஸ் பிரமேசந்திரன் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன் ஓரங்கட்டப்பட்டு இந்தத் தூதுக்குழுவில் இருந்து வெளியேற்றபட்டுள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தீவிரமாக உழைத்தவர். கடந்த 12 வருடங்களாகத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் வன்னி பெரு நிலபரப்பையும் ரெலோ அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.
எனவே அவர் புறந்தள்ளபட்டுள்ளதுடன் வன்னி மக்களின் அவலத்தை எடுத்துக்கூற வன்னி மக்களின் பாராளுமன்ற உறுப்பினருக்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தடை விதித்துள்ளதாகப் பலரும் சுட்டி காட்டி உள்ளனர்.
சுமந்திரன் புலிகளின் வழக்குகளை சுமார் பல மில்லியன் பணம் பேரம்பேசி நீதிமன்றில் வாதாடியவர் என்று கருதப்படுகின்றவர். அவர் மக்களால் தெரிவு செய்யப்படாத ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
வன்னி மக்களின் பிரதிநிதிகளை ஓரங்கட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ்பாணத்தை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் 02 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சம்பந்தன் தலைமையில் அமெரிக்கா செல்கின்றமை கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என தமிழர் கொள்கை வகுப்புப் பிரிவினர் கருத்து தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment