கடாபியின் மன்களில் ஒருவரான முத்தாசிம் உடல் முதலில் காட்டப்பட்டு அவர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார் என்ற செய்திகளை மேற்குல தொலைக்காட்சிகள் வெளியிட்டனர். ஆனால் புதிதாக வந்துள்ள மற்றுமொரு காணொளியால் பெருஞ்சர்ச்சை தோன்றியுள்ளது. காரணம் அவரை கிளர்ச்சிப் படையினர் உயிருடன் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவருக்கு ஒரு சிகரெட்டும் வழங்கப்பட்டுள்ளது. அவர் புகைப் பிடிக்கும் காட்சிகள் காணொளியாக வெளிவந்துள்ளது.
உயிருடன் இருக்கும் அவர் சிறிய காயங்களோடு காணப்படுகிறார். ஆனால் பின்னர் அவர் பாரிய காயங்களுடன் இறந்து கிடக்கும் காட்சி வெளியாகியது.
மொத்தத்தில் மேற்குலக தொலைக்காட்சிகள் கூறியது போல அவர் சண்டை நடந்த இடத்தில் இறக்கவில்லை. மாறாக கைதுசெய்யப்பட்டு பின்னர் அவரை கிளர்ச்சியாளர்கள் கொலைசெய்துள்ளனர் என்பதே உண்மையாகும். வெளியாகியுள்ள காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment