மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக் கணக்கையும் வெளியிட வேண்டும், என ராகுல் கூறிய கருத்துக்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
காங், பொதுச் செயலர் ராகுல், “மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர், மனைவிமார் வாரிசுகள் மற்றும் சகோதரர்கள் என, அனைவரது சொத்துக் கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும், என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பரிந்துரைக் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு காங்.
கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஷித் ஆல்வி கூறுகையில், அமைச்சர்கள் உட்பட, அவரை சார்ந்துள்ள அனைவரது சொத்துக் கணக்கையும் வெளியிட வேண்டியது அவசியம் என்றார்.
அதேபோல, காங், பொதுச் செயலர் திக் விஜய் சிங் கூறுகையில், “பிரதமருக்கு ராகுல் கடிதம் எழுதியது பற்றி எதுவும் தெரியாது. எனினும், இது நல்ல ஆலோசனை, அவரது பரிந்துரை நடைமுறைப்படுத்தப்படும் என உறுதியாக கூறுகிறேன்” என்றார்.
No comments:
Post a Comment