சென்னை: பிரபல நடிகர் எல்ஐசி நரசிம்மன் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 71.
200- படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் நரசிம்மன். ரஜினியின் 6 லிருந்து 60 வரை படத்தில், அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் கவனிக்கத் தக்க நடிகரானார்.
பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகள் ரொம்பப் பிரபலம். குறிப்பாக வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ளும் காட்சி. 'நின்னுக்கோரி வரணும...' என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லிக் கொடுப்பார்.
இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
200- படங்களுக்கும் அதிகமாக நடித்தவர் நரசிம்மன். ரஜினியின் 6 லிருந்து 60 வரை படத்தில், அவருக்குத் தம்பியாக நடித்ததன் மூலம் கவனிக்கத் தக்க நடிகரானார்.
பின்னர் நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்றார். கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து எல்.ஐ.சி. நரசிம்மன் நடித்த காமெடி காட்சிகள் ரொம்பப் பிரபலம். குறிப்பாக வித்வான் கவுண்டமணியிடம் கசாப்பு கடைக்காரரான எல்.ஐ.சி. நரசிம்மன் பாட்டு கற்று கொள்ளும் காட்சி. 'நின்னுக்கோரி வரணும...' என்ற பாடலை வேறு மெட்டில் பாட கவுண்டமணி சொல்லிக் கொடுப்பார்.
இதில் நரசிம்மன் ஆடுவெட்டும் கத்தியை வைத்துக்கொண்டு கறியை வெட்டிக்கொண்டே பாடி கவுண்டமணியை பயமுறுத்த அவர் ஓடி விடுவார். இந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
எல்.ஐ.சி. நரசிம்மன் கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டார். நேற்று உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.
எல்.ஐ.சி. நரசிம்மனுக்கு சுரேஷ் என்ற மகனும் ஜெயந்தி என்ற மகளும் உள்ளனர். சின்மயா நகர் நெற்குன்றம் ரோட்டில் உள்ள வீட்டில் நரசிம்மன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment