துபாய்: துபாய் விமான நிலையத்தில் நடிகை மினிஷா லம்பாவின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்ட, குடியுரிமை அதிகாரி ஒருவர், அவரை காத்திருக்க கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரை சேர்நதவர் மினிஷா லம்பா (26). மாடலிங் துறையில் பொழுது போக்காக நடிக்க வந்த இவர், தற்போது இந்தி நடிகையாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் சென்ற நடிகை மினிஷாவிடம், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சில விவரங்களை கேட்டனர். அதிகாரி ஒருவர், நீங்கள் எந்த லாட்ஜில் தங்கியிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு மினிஷா, அந்த விபரங்கள் எனக்கு ஞாபகம் இல்லை. விமான நிலையத்தில் என்னை அழைத்து செல்ல காத்திருக்கும் நபருக்கு தான் அது தெரியும் என கூறியுள்ளார். அந்த பதிலில் திருப்தியடையாத அதிகாரி, நடிகையின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு, அங்கிருந்த ஒரு நாற்காலியை காட்டி, வாயை மூடி கொண்டு அங்கே போய் உட்கார் என உறுதியாக கூறிவிட்டார். பின்னர் அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவர் வந்து நடிகைக்கு பாஸ்போர்ட்டை திரும்ப வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து நடிகை மினிஷா கூறியதாவது, என்னிடம் தங்கியுள்ள ஹோட்டல் குறித்த விவரங்களை கேட்டார். அது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. விமான நிலையத்தின் வெளியே எனக்கு வேண்டியவர் நிற்பதாக தெரிகிறது. அவருக்கு தான் அந்த விபரங்கள் தெரியும் என கூறினேன்.
அதுகுறித்து எனது மொபைல்போனில் இருந்த விவரங்களையும், அவருக்கு காட்ட முயன்றேன். அதை கவனிக்காத அந்த அதிகாரி என்னை கடினமாக திட்டிவிட்டார். மும்பை திரும்பியவுடன், அந்த சம்பவம் குறித்து புகார் அளிப்பேன். இந்தாண்டில் விமான நிலையங்களில் எனக்கு நேரமே சரி இல்லை. ஒரு ஜோதிடர் கூறியது போல ரயிலில் பயணம் செய்வதே நல்லது என நினைக்கிறேன், என்றார்.
நடிகை மினிஷா கடந்த கடந்த மே மாதம் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, மும்பை விமான நிலையம் வந்திறங்கியபோது, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். பின்னர் அவர் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரை சேர்நதவர் மினிஷா லம்பா (26). மாடலிங் துறையில் பொழுது போக்காக நடிக்க வந்த இவர், தற்போது இந்தி நடிகையாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் சென்ற நடிகை மினிஷாவிடம், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சில விவரங்களை கேட்டனர். அதிகாரி ஒருவர், நீங்கள் எந்த லாட்ஜில் தங்கியிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு மினிஷா, அந்த விபரங்கள் எனக்கு ஞாபகம் இல்லை. விமான நிலையத்தில் என்னை அழைத்து செல்ல காத்திருக்கும் நபருக்கு தான் அது தெரியும் என கூறியுள்ளார். அந்த பதிலில் திருப்தியடையாத அதிகாரி, நடிகையின் பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு, அங்கிருந்த ஒரு நாற்காலியை காட்டி, வாயை மூடி கொண்டு அங்கே போய் உட்கார் என உறுதியாக கூறிவிட்டார். பின்னர் அங்கிருந்த மூத்த அதிகாரி ஒருவர் வந்து நடிகைக்கு பாஸ்போர்ட்டை திரும்ப வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து நடிகை மினிஷா கூறியதாவது, என்னிடம் தங்கியுள்ள ஹோட்டல் குறித்த விவரங்களை கேட்டார். அது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. விமான நிலையத்தின் வெளியே எனக்கு வேண்டியவர் நிற்பதாக தெரிகிறது. அவருக்கு தான் அந்த விபரங்கள் தெரியும் என கூறினேன்.
அதுகுறித்து எனது மொபைல்போனில் இருந்த விவரங்களையும், அவருக்கு காட்ட முயன்றேன். அதை கவனிக்காத அந்த அதிகாரி என்னை கடினமாக திட்டிவிட்டார். மும்பை திரும்பியவுடன், அந்த சம்பவம் குறித்து புகார் அளிப்பேன். இந்தாண்டில் விமான நிலையங்களில் எனக்கு நேரமே சரி இல்லை. ஒரு ஜோதிடர் கூறியது போல ரயிலில் பயணம் செய்வதே நல்லது என நினைக்கிறேன், என்றார்.
நடிகை மினிஷா கடந்த கடந்த மே மாதம் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, மும்பை விமான நிலையம் வந்திறங்கியபோது, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். பின்னர் அவர் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment