கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை திறப்புவிழாவில் பங்கேற்க வந்திருந்த ஐஸ்வர்யா ராயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கொச்சி எம்.ஜி. சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில் வெள்ளையும், சந்தனமும் கலந்த உடையில் ஐஸ்வர்யாராய் பங்கேற்று புதிய நகைக்கடை ஷோரூமை திறந்து வைத்தார். இதன் மற்றொரு விளம்பர தூதரும் மலையாள நடிகருமான திலீப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் கேரளா மாநில அமைச்சர்கள், மேயர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஐஸ்வர்யாராயை காண அவருடைய ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் முறையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளவை என்று பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் நேரிலேயே வந்து நகைக்கடை திறப்புவிழாவில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment