மும்பை: பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மேரி கோமின் வாழ்க்கையை படமாக்கவிருக்கிறார். இதற்கான திரைக்கதையை ஆர்ட் டைரக்டர் ஓமங் குமார் தயாரித்து வருகிறார். மேரி ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முன்பே அவரது வாழ்க்கையை படமாக்குவது குறித்த முயற்சிகளை துவங்கியதாக பன்சாலி தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு முன்பே ஓமங் மேரியை சந்தித்து அவரது வாழ்க்கையை படமாக்க அனுமதி கோரியுள்ளார். மேரியும் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
இந்த படம் குறித்து பன்சாலி கூறுகையில்,
மேரி கோம் இரண்டு குழந்தைகளின் தாய். அவர் பல போராட்டங்களைத் தாண்டி சாதித்துள்ளார். அவர் தற்போதைய உலக சாம்பியன். இந்தியாவில் குத்துச்சண்டை வீராங்கனைகள் அரிது. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
மேரி கோம் பற்றிய படம் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment