முல்லைத்தீவில் நேற்றிரவு கடல்நீர் பெருக்கெடுத்து ஊர்மனைக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் இருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு திபு திபுவென கடல் நீர் திடீரென உட்புகத்தொடங்கியது.
இதனால் ‘சுனாமி வந்துவிட்டது’ என மக்கள் அலறியடித்துக் கொண்டு கையில் அகப்பட்ட பொருள்களோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் இதன்போது உள்ளிழுத்து வரப்பட்டன.ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான கடல்நீர் ஊர்மனைக்குள் புகுந்திருந்தது.
செம்மலை, கள்ளப்பாடு,அளம்பில், முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதி, உடப்புக்குளம் என்பன இந்தக் கடற்பெருக்கின் போது பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.ஊர்மனைக்குள் புகுந்த கடல்நீர் இன்னமும் வற்றாமல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.இதன்போது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத்தெரிகிறது.
ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியான நாளில் இது போன்று திடீரென கடற்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலேயே இருக்கின்றனர்.
நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் இருந்து கரையை அண்டிய பகுதிகளுக்கு திபு திபுவென கடல் நீர் திடீரென உட்புகத்தொடங்கியது.
இதனால் ‘சுனாமி வந்துவிட்டது’ என மக்கள் அலறியடித்துக் கொண்டு கையில் அகப்பட்ட பொருள்களோடு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் இதன்போது உள்ளிழுத்து வரப்பட்டன.ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான கடல்நீர் ஊர்மனைக்குள் புகுந்திருந்தது.
செம்மலை, கள்ளப்பாடு,அளம்பில், முல்லைத்தீவு நகரை அண்டிய பகுதி, உடப்புக்குளம் என்பன இந்தக் கடற்பெருக்கின் போது பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.ஊர்மனைக்குள் புகுந்த கடல்நீர் இன்னமும் வற்றாமல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.இதன்போது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத்தெரிகிறது.
ஆழிப்பேரலை ஏற்பட்டு ஏழு வருடங்கள் பூர்த்தியான நாளில் இது போன்று திடீரென கடற்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்திலேயே இருக்கின்றனர்.
No comments:
Post a Comment