விடுதலைப் புலிகள் தொடர்பாக எந்த வடிவத்திலேனும் விளம்பரப்படுத்துவதற்கும், கொண்டாட்டங்களை அல்லது நிகழ்வுகளை நடத்துவதற்கும் இலங்கையில் தான் தடைவிதித்துள்ளது.
இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் கெகலிய இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேபோன்று புலிகளின் நிகழ்வுகளைத் தடைசெய்வதைப் பின்பற்றுமாறு ஏனைய நாடுகளையும் இலங்கை அரசாங்கம் இராசதந்திர வழிமுறைகளின் மூலம் கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்தவாரம் அனுராதபுர சிறைச்சாலை அத்தியட்சகர் நேரகாலத்துடன் நடவடிக்கை எடுத்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கக் கைதிகள் மாவீரர் நாளை நினைவு கொள்வதை தடுத்திருக்காது போனால், பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும்.
ஏனென்றால் சிங்களக் கைதிகள் அவர்களை தாக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று நமபிக்கையான தகவல் கிடைத்துள்ளது.
அனுராதபுர சிறையில் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் 53 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களே மாவீரர் நாளை நினைவு கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். திடீர் சோதனையின் மூலம் அது தடுக்கப்பட்டது.
சோதனையின்போது, பிரபாகரனின் படங்கள், புலிச்சின்னம், மூன்றாவது தலைமுறை தொலைபேசிகள் மூன்று, 19 கைத்தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டன“ என்றும் கெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
இது தான் சிங்களவன் என்பது அடி முட்டாள் என்பது.!
No comments:
Post a Comment