தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு பேசியதாவது:
ஒரு நல்ல அரசாங்கம் எப்படி நடத்த வேண்டும். அது உங்களுக்கு தெரியாதா? அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஒரு ஹிட்லர் போல ஆட்சி நடத்திக்கிட்டு இருக்காங்க. மக்களுக்கு நல்லது செய்யனும் என்பது கிடையாது. நான் சொல்வது தான் சட்டம் என்று இருக்காங்க.
வந்த உடனேயே சமச்சீர் கல்வி மேலே கை வைச்சாங்க. 3 மாசமா பள்ளிக்கூடம் போய் படிக்காம வந்தாங்க பசங்க.
திமுக ஆட்சியில் கஜானா காலி என்ற பிரச்சாரம் செய்சாங்க. சமச்சீர் கல்வி விஷயத்தில் பசங்க படிப்ப 3 மாசம் கெடுத்தீர்கள். ஏற்கனவே இருக்கிற பக்கங்கள் மீது வேற பேப்பரை ஒட்டி, அத மறுபடியும் கிழிச்சி, உச்சநீதிமன்றத்திலிருந்து உத்தரவு வந்த பின்னர் மறுபடியும் இன்னொரு பேப்பரை ஒட்டி, நீங்க 200 கோடி ரூபாய்க்கு மேலே செலவு பண்ணிருக்கீங்க. வீண் செலவு. அந்த செலவை மிச்சம் பிடிச்சிருந்தால், இன்றைக்கு பால் விலையை ஏற்றிருக்க வேண்டாம்.
அதற்குப் அப்புறம் மக்களுடைய வரிப்பணத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகம். தலைவர் அவர்கள் கட்டியிருக்கிறார். தலைவருக்கு பெருமை போய்விடக்கூடாது என்பதற்காக, நீங்க காலை எடுத்து வைக்கமாட்டேன் என்று சொல்லி, கோட்டைக்கு திரும்பி போய்டீங்க. புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத்தை நடத்த முடியாதா உங்களாள. முடியும். ஏன் போறதில்ல. வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறீங்க. படிச்ச காலத்தில வாஸ்து சாஸ்திரம் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. மூடநம்பிக்கை இல்லாமல் வாழனும். அப்பத்தான் முன்னேற முடியும் என்று நாம சொல்லிக்கிட்டு இருக்கோம். ஆனால் இந்த அம்மா மூட நம்பிபிக்கையை வளர்ப்பதிலேயே இருக்காங்க.
அரசாங்கம் வருஷத்துக்கு ஒரு தடவைத்தான் பட்ஜெட் போடும். ஆனால் குடும்ப தலைவிகள் மாசத்துக்கு பட்ஜெட் போட்டுத்தான் குடும்பத்தை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. 1000 ரூபாய்க்கு வாங்கிய பால், இன்னைக்கு 1500 ரூபாய். பஸ் கட்டணம் 1300 ரூபாய் இருந்தது. இன்னைக்கு 1800 ரூபாய்.
5, 10, 50, 100 என பக்கத்து வீட்டில் கேட்கலாம். அடுத்த மாசம் கொடுத்திடலாம். 200 தேவைப்பட்டால் சொந்தக்காரங்க, நண்பர்களிடம் கேட்கலாம். ஆனால் இப்போது ஒரு மாசம் பட்ஜெட்டில் எங்க இடிக்கிறது. 2000 ரூபாய். 3000 ரூபாய். 5 ஆயிரம், 6 ஆயிரம் சம்பளம் வாங்கிறவர்கள் எங்கே போவார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு வேலை சோறு கொடுக்க முடியவில்லை என்றாலும், ஒரு டம்ளர் பால் கொடுத்து தூங்க வைச்சிரலாம் என்று தாய்மார்கள் நினைக்கிறாங்க. அப்பதான் சத்து கிடைக்கும். கால்சியம் கிடைக்கும் என்று நினைக்கிறாங்க. ஆனால் இன்றைக்கு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் தாய்மார்கள் கண்ணீர் விடுறாங்க. ரத்த கண்ணீர் விடுறாங்க. வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வரக் கணவன் ஒரு டம்ளர் காப்பி கொடு என கேட்க பயப்புடுறாங்க. அதற்கு காரணம் யார்? அம்மையார் ஜெயலலிதா அவர்கள்.
இவங்க ஏசி வண்டில உட்கார்ந்துகிட்டு, ஏசி வண்டில சுத்திக்கிட்டு கொடநாடு போய் ஜாலியா இருப்பாங்க. அவங்க ஆட்சியில கஷ்டப்படுவது தமிழ்நாட்டு மக்கள் தான். இவ்வாறு பேசினார்.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்: குஷ்பு
No comments:
Post a Comment