
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று காலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் இன்று காலை 10 மணி முதல் பெறுபேறுகளை பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய வெளிமாவட்டப் பாடசாலைகளுக்கான பெறுபேறுகளும் இன்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியினூடாக பார்வையிட முடியும்.
உயர் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கமைய இசட் புள்ளிகளை இடுவது தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்களினாலேயே இதுவரை பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-
தமிழீழமண்ணின் உதயன்.


No comments:
Post a Comment