
கருணாவால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என ஜீவா அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்களில் நடிகை சங்கீதா, அவரின் கணவரான பாடகர் கிரீஷ் ஆகியோருடன் நடிகர் ஜீவாவும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்த விழாவினை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் உட்பட சர்வதேசத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே தான் இந்த விழாவில் பங்கேற்கவிருந்த திட்டத்தினை ரத்துச் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனவே எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன்," என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment