
நம்ப முடியாத படி நாடகம் எங்கள் தமிழீழத்தில் நம்பும் படியாக இப்படியும் அப்படியும் அங்கு..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சை நிறுத்தி மேடையிலிருந்து வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும்.
இப்படி…
இடதுசாரிகள், கூட்டமைப்பிராகிய சிங்கள அமைச்சுக்கள் அறிக்கை விடுவது அதிர்ச்சி தருகின்றது.
நம்புவோமா..?
எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளதாகவும்.
உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும் என இடது சாரியான நவசமசமாயக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்த அறிக்கையில்…
அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக தமிழீழ ஊடகச்சகோதரர்க்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நவசமசமாயக் கட்சியின் பொதுச்செயலாளரும் தெகிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்திந்தார்.!
மேலும் கூறியதில் :
வெளிநாடுகளில் நகரசபைகளுக்குக்கூட காவல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரம் உட்பட முக்கியமான அதிகாரங்களை வழங்குவதற்கு மகிந்த அரசு மறுப்புத் தெரிவிக்கின்றது.
மகிந்தர் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவே அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது.
நிலைமை அப்படியிருக்கையில், அரசு மழுப்பல் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?
13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்யவுள்ளோம் என அரசு கூறுவது அபத்தமானது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். பிரதான எதிர்க்கட்சியில் இனவாதப் போக்குடையவர்கள் இருப்பதும் மகிந்த அரசுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது.
சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்.
அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் எனக் கூறிக்கொண்டு பேச்சைத் தொடர்பவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை.
கூட்டமைப்பு, உடன் பேச்சு மேடையிலிருந்து வெளியேறி தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.!
உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பெரும் கூட்டங்களைத் தெற்கில் நடத்தவேண்டும். அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றார்.
என்று தெருவித்தது இடது சாரி.
இதில் எப்படி நம்புவது என்பது தமிழ் மக்கள் ஊடகப்பக்கம் திரும்பி செய்திகளை படித்து பதிலை எங்களிடமே கேட்கின்றனர்.
ஆனால்..?
நாங்கள் ஏமாறுவது இயல்பானதாகவிட்ட குணமாகிவிட்டது.
எனினும் நாங்கள் அவதானத்துடன் செயல்படுவோம் என அறிவுறுத்துகின்றோம்.
காத்திருப்போம்.
துரோகியை விட எதிரி தான் நண்பனாக மாற முடியும் இதுவும் கடந்து போகும் போது தான் உணர முடியும் அல்லவா ..?
உங்களுக்கு நாங்கள் வளி காட்டி என்பதையும் தாண்டி மக்களாகவே நாங்களும் வாழ்கின்றோம்.
எனினும் உங்கள் கேள்விக்கு விடை தெளிவாக கிடைக்கும்.!!!


No comments:
Post a Comment