கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஜெயித்த 6 லட்சம் ரூபாயை திரைப்படத்துறை, சின்னத்திரை நடிகர்களின் நலநிதிக்காக கொடுத்தார் செல்லம்மா ராதிகா.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியில் கடந்த வாரம் செல்லமே சீரியலில் நடிக்கும் நடிகைகள் பங்கேற்றனர்.செல்லம்மா - முத்தழகி பங்கேற்க அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கலைவாணியும், சிவரஞ்சனியும் பங்கேற்றனர். நடனம், பாடல் என உற்சாகமாக களை கட்டிய இந்த நிகழ்ச்சியின் முடிவில் செல்லம்மாவும், முத்தழகியும் 6 லட்சம் ரூபாயை வென்றனர்.
பரிசாக பெற்ற ரூபாயை வீடற்ற நலிந்த கலைஞர்களுக்கு வழங்குவோம் என்று முதலியே நடிகை ராதிகா தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் நடிகர் சரத்குமாரிடம் 3 லட்சம் ரூபாயை அவர் வழங்கினார்.
மீதமுள்ள 3 லட்சம் ரூபாயை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் என்ற வகையில் சின்னத்திரை கலைஞர்களின் நலனுக்காக செலவிடப்போவதாக அவர் கூறினார்.
கையில் ஒரு கோடி நிகழ்ச்சியில் இந்த வாரமும் சின்னத்திரை குடும்பத்தினரே பங்கேற்க உள்ளனர். திருமதி செல்வம் தொடரில் நடிக்கும் செல்வம் - அர்ச்சனா ஜோடி போட்டியில் பங்கேற்க அவரது சகோதரியும், தோழியும் அவர்களை உற்சாகப்படுத்த வருகின்றனர். அதற்கான முன்னோட்டமே கலகலப்பாக உள்ளதால் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment