கடல் படத்திலிருந்து சமந்தா விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, புதிய ஹீரோயினாக நடிகை ராதாவின் இளம் மகள் துளசி அறிமுகமாகவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமந்தா இல்லாத குறையைப் போக்க முன்னணி நடிகை ஒருவரை முக்கியப் பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குநர் மணிரத்னம் முடிவு செய்து, அந்த வேடத்துக்கு நயன்தாராவை அழைத்துள்ளார்.
அநேகமாக அர்ஜுனுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறப்படுகிறது.
மணிரத்னம் படத்தில் நடிக்க வந்துள்ள அழைப்பு நயன்தாராவுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், இந்தப் படத்தால் தனக்கு நன்மையா.... அல்லது கேரக்டர் ஆர்டிஸ்ட் என்ற இமேஜுக்குள் தள்ளிவிடுவார்களா என்ற யோசனையில் மூழ்கியுள்ளாராம் நயன்தாரா.
நயன்தாரா இப்போது அஜீத் ஜோடியாக விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கிறார். மேலும் ஒரு பெரிய பட்ஜெட் படத்துக்கும் பேச்சு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment