தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம்சரண் தேஜா - உபாசனா திருமணத்தில், நண்பர்கள் புடைசூழ கலந்து கொண்ட ரஜினி, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ராம் சரணுக்கும், அப்பல்லோ குழும மருத்துவமனைகள் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. மிக ஆடம்பரமாக நடந்த இந்த திருமணத்தில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் திரளாக வந்து பங்கேற்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் நண்பர்கள் மோகன் பாபு, அம்ரீஷ் உள்ளிட்டோருடன் திருமணத்துக்கு வந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
பின்னர் மணமக்களை வாழ்த்திய ரஜினியை, பல்வேறு மொழி சினிமாவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளையும் சந்தித்துப் பேசினர்.
முன்னதாக ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், தமிழக கவர்னர் ரோசைய்யா, முதல்வர் கிரண் குமார் ரெட்டி, அமைச்சர்கள், நடிகர்கள் அமிதாப் பச்சன், வெங்கடேஷ், ஸ்ரீதேவி, ப்ரியங்கா சோப்ரா உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.
No comments:
Post a Comment