இந்த ஆண்டு இறுதிக்குள் சிறிலங்கா பொறுப்புக் கூறும் நடவடிக்கையை மேற்கொண்டு, வெளிப்படையானதும், நேர்மையானதுமான உறவுகளைப் பிரித்தானியாவுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெற்காசிய வெளிவிவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும், ஆவணப்படத்தை ஆராய்ந்த நிபுணர்களும் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சுதந்திரமான, விரிவான, நம்பகமான விசாரணைகளின் மூலம் மட்டுமே உண்மையான நல்லிணக்கத்தை கொண்டு வரமுடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதன் மூலம் ஒரு நேர்மையான முடிவுக்கு வரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பணி மற்றும் அதன் அறிக்கை என்பன அனைத்துலக தரத்தில் இருப்பதுடன் அதன் தீர்மானங்கள் அதிகபட்ச நம்பகத் தன்மையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரித்தானிய அமைச்சர் பேர்ட் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியான சமாதானத்தையும், பாதுகாப்பையும் கட்டியெழுப்புவதன் மூலம் சிறிலங்காவில் உண்மையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றே பிரித்தானியா எதிர்பார்ப்பதாகவும், அதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கத் தயார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும், ஆவணப்படத்தை ஆராய்ந்த நிபுணர்களும் போரின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துள்ளது குறித்து பிரித்தானியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சுதந்திரமான, விரிவான, நம்பகமான விசாரணைகளின் மூலம் மட்டுமே உண்மையான நல்லிணக்கத்தை கொண்டு வரமுடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதன் மூலம் ஒரு நேர்மையான முடிவுக்கு வரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பணி மற்றும் அதன் அறிக்கை என்பன அனைத்துலக தரத்தில் இருப்பதுடன் அதன் தீர்மானங்கள் அதிகபட்ச நம்பகத் தன்மையைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் பிரித்தானிய அமைச்சர் பேர்ட் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியான சமாதானத்தையும், பாதுகாப்பையும் கட்டியெழுப்புவதன் மூலம் சிறிலங்காவில் உண்மையான நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்றே பிரித்தானியா எதிர்பார்ப்பதாகவும், அதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கத் தயார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment