6/30/2011 12:05:54 PM
‘யுவன் யுவதி’ பட இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேல் கூறியது: பிருத்விராஜ் நடித்த 'நினைத்தாலே இனிக்கும்’ படத்தை சஸ்பென்ஸ், காதல் இரண்டும் கலந்து இயக்கினேன். அடுத்து நகைச்சுவையுடன் காதல் கதையாக உருவாகிறது 'யுவன் யுவதி’. இதன் கதை, வசனத்தை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். படிப்பு நண்பர்களை எப்படி சேர்க்கிறது, பிரிக்கிறது என்ற கருவுடன் தந்தை-மகன், காதலன்-காதலிக்கு இடையே நடக்கும் பிரச்னையை படம் சொல்கிறது. பரத், ரீமா கல்லிங்கல், சம்பத் நடிக்கின்றனர்.
மறைந்த இயக்குனர் ஜீவாதான் இக்கதையை முதலில் இயக்குவதாக இருந்தது. திரைக்கதை கூட உருவாக்கி இருந்தார். இது பற்றி என்னிடம் ராமகிருஷ்ணன் கூறியபோது கதையை கேட்டேன். நன்றாக இருந்தது. அதன் திரைக்கதையில் மாற்றம் செய்து இயக்கும் பொறுப்பை ஏற்றேன். கிராமத்தில் ஷூட்டிங் தொடங்கி சீசல்ஸ் கடற்கரை தீவில் முடிந்துள்ளது. ஜீவா இயக்க வேண்டிய படத்தை நான் இயக்குவது பெருமை. விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார்.
No comments:
Post a Comment