கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
அவர், ‘’விலை வாசி உயர்வு மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மக்கள் விரோத அரசு என்பதை நிரூபித்திருக்கிறது. இவர்கள் உலக அளவில் கச்சா எண்ணை விலை குறைந்திருந்த காலத்தில் கூட இங்கு விலைவாசியை குறைத்தது இல்லை.
இப்போதும் அதே காரணத்தைதான் சொல்கிறார்கள். கச்சா எண்ணை .உயர்ந்ததால் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியதாக சொல்லுகிறார்கள்.
ஆனால் இவர்களுடைய நோக்கம் பெரு முதலாளிகளும், தனியார் எண்ணை நிறுவனங்களும், லாபம் அடைய வேண்டும் என்பதற்காகவே துணை போகிறார்கள்.
இன்னும் சிலர் சொல்லுகிறார்கள். விலையை குறைக்க வேண்டும் என்றூ சொல்லுகிறார்கள். ஆனால், இந்த விலையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பதே மதிமுகவின் கோரிக்கை.
இதனால் நடுத்தர மக்களும் தினக்கூலியாக உழைப்பவர்களூம், பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மற்ற மாநிலங்களில் விலைவாசியை கட்டுப்படுத்தியை அரசுகள் போல் தமிழகத்திலும் செய்வார்கள் என்று நம்புகிறோம்.
கடல் அலை ஓய்ந்தாலும் மதிமுகவின் மக்களுக்கான போராட்டம் ஓயாது. தமிழக மக்களுக்கு எந்த
பிரச்சனை நடந்தாலும் அங்கு மதிமுக தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தமிழக மக்களுக்காக மதிமுக கடைசிவரை போராடிக்கொண்டே இருக்கும்’’ என்று பேசினார்.


No comments:
Post a Comment