பிரான்சில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் விமானக்கண்காட்சி பொருட்காட்சியினால், பிரதான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதினால் மக்களின், கலைஞர்கள், போட்டியாளர்கள் வருகை தாமதப்பட்டதனால் பி.பகல் 14.00 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.
ஈகைச்சுடரினை மாவீரன் ரூபனின் சகோதரி அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு சங்கொலி பாடற்போட்டிபற்றிய தெரிவிப்புடன், இப்போட்டியின் நடுவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தாயகத்தில் நுண்கலைப்பிரிவு பட்டதாரியும், தற்போது பிரித்தானியாவில் இசைத்தமிழ் ஆசிரியருமான திருமதி. nஐ. தமிழரசி அவர்கள், தமிழ்நாடு திருச்சி கலைக்கல்லூரி பட்டதாரியும் மிருதங்க ஆசிரியருமாகிய திரு. கட்சன் அவர்களும், சங்கொலி தெரிவுப்போட்டியில் சிறப்பாக பிரதம கடமையாற்றிய கலைச்சிறப்புப்பட்டதாரி, திருமதி சாந்தரூபா அவர்களும், தலைமை நடுவராக தாயக கலைபண்பாட்டுக்கழக கலைஞர் திரு. தி. மாறன் அவர்களும், தாயத்தில் பல்வேறு சிறப்புகளை பெற்றவரும் ஆசிரியரும், பாடகர், பாடலாசிரியரும் ஐரோப்பிய நாட்டில் உள்ள திலீபன் பாடசாலை தமிழ் ஆசிரியருமாகிய திரு. குமரகுருபரன் அவர்களும் கடமையாற்றியிருந்தார்.
பிரிவுகள் யாவும் இங்கு வாழும் குழந்தைகளுக்கேற்றவாறு பிரிக்கப்பட்டிருந்தன. கீழப்;பிரிவு, மத்தியபிரிவு, மேல்ப்பிரிவு, அதிமேற்பிரிவு, அதிஅதிமேற்பிரிவு, சிறப்புப்பிரிவு, என பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம் பெற்றிருந்தன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறப்பாக பாடல்களை பாடியிருந்தனர்.
புலம்பெயர் மண்ணில் எமது குழந்தைகள் பிறந்து அந்நிய மொழியில் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் தாயகப்பாடல்களை மனநம் செய்து அதனை ஒப்புவித்த குழந்தைகள் என்றும் போற்று தற்குரியவர்களாகும். போட்டிகள் யாவும் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தன.
போட்டிகளில் பங்கு பற்றும் குழந்தைகள் பெற்றோர்கள் காலை 10.00 மணிக்கே மண்டபத்திற்கு ஆர்வத்துடன் வருகை தந்திருந்தனர். 3வயது குழந்தை முதற்கொண்டு 52 வயது பெரியவர்கள் வரை இப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு பேச்சை ஆற்றியவர்கள் தமது உரையில் இசையென்பது பலவகைகளைக் கொண்டது என்றும் அவை இயல், இசை, நாடகம்,கூத்துப்பாடல், சங்கீதம், என்ற போதும் தமிழீழத்தில் கடந்த 30 ஆண்டுகளில் உருவாக்கம் கண்ட பாடல்கள் எல்லாவற்றையும் விட மேலானதாகவுள்ளது என்றும் தமிழர்கள் எமது விடுதலைப்பாடல்கள் எமது இருப்பையும், தமிழினத்தின் மானத்தையும், வீரத்தையும், அடிநாதமாய் கொண்டு எமது மண்ணின் விடுதலை சுதந்திர வாழ்வையும், அதற்காக உயிர்ஈந்த உத்தமர்களை நினைவில் ஏற்றி என்றும் எம்மோடு உயிராக வாழ்ந்து கொண்டிருக்கும் பாடல்கள் என்பதோடு ஒவ்வொரு மாவீரனும் விருப்போடு தாய்நாட்டின் விடுதலைக்காகச்சென்று உயிர் ஈகம் செய்கின்றான்.
அதேபோலவே எம்மவர்களும் தாயக கலைகளையும், இசைகளையும் விருப்போடு பயின்று ஒப்புவிப்பவர்கள் வணக்கத்துக்குரிய தமிழர்களாகவே பார்கின்றோம் என்றும் இந்த நிகழ்வுகள் ஒரு பணத்துக்காகவோ, பகட்டுக்காகவோ, பட்டத்துக்காவோ நடாத்தப்படவில்லை என்றும் இன்று 40 வரையிலான கலைஞர்களை வெளிகொணரப்பட்டுள்ளது என்றும் அவர்களை தொடர்ந்தும் உலகம் முழுவதும் வாழும் எமது சந்ததிக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து தொடர்ந்து தன்தாய்மண்ணுக்காக, தனது மொழிக்காக, தனது இனத்துக்காக அதன் இறுதி இலட்சியம் வரை தொடர்ந்து பயணிக்க கலைரீதியாகவும் வலிமை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
எமது தேசியத்தலைவர் அவர்கள் மாவீரர்நாள் கொள்கை விளக்கத்தில் கூறியதற்கமைய உலகத்தமிழர்கள் நாம் இனி ஒன்றிணைந்து தமிழனுக்கென்றொரு நாடு வேண்டும் என்பதற்காக பாடுபட வேண்டும் என்பதற்கமைய மெறிசியசு நாட்டைச்சேர்ந்த திருமதி. மீரா குப்தன் அவர்கள் மிக அழகாக தமிழில் எங்கள் இனம் ஆண்டதம்மா தமிழீழ மண்ணிலே இனவெறியால் மாண்டதம்மா எங்கள் கண்முண்ணிலே என்ற பாடலை மிக அழகாக பாடியிருந்தாமை இன்றைய நிகழ்வில் முத்தாய்ப்பாய் நடைபெற்றதொரு விடயமாகும்.
சிறப்பு நடுவராக கடமையாற்றிய திரு. குமரகுருபரன் அவர்கள் தாயவள் அன்னை பூபதி அம்மா நினைவாக ஒரு பாடலை தானே எழுதி இசையமைத்த பாடலை பாடி கண்களில் கண்ணீரையும், ஒரு வியப்பையும், அவர்மீது மதிப்பையும் தந்திருந்தது. இதற்கு இசை வழங்கிய கலைபண்பாட்டு கலைஞர்கள் அந்த இடத்திலேயே அதற்குரிய இசையை வழங்கியது மிகுந்த பாராட்டுதல்களை பெற்றிந்திருந்தது.
சங்கொலி 2011 தொழில்நுட்பவியலாளர்கள் ஒவ்வொரு போட்டியாளர்களும் பாடல் பாடவரும் முன் சங்கொலி போட்டியில் பற்றுவதற்காக அவர்கள் வழங்கிய போட்டிகளை வெண்திரையில் அழகாக வரச்செய்திருந்தனர். அனைத்து பிரிவுகளிலும் போட்டியாளர்கள் மத்தியில் பல போட்டிகள் இடம்பெற்றிருந்தன.
நடுவர்கள் தமது தொகுப்புரைகளில் அதனைத்தெரிவித்தனர். தொடர்ந்து இக்கலைஞர்கள் தவறானவர்களால் வேறு திசைகளுக்கு தவறாக கொண்டு செல்வதை மாற்ற வேண்டும் இசைக்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான உடனடி செயற்பாடுகளை கலைபண்பாட்டுக்கழகம் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வாத்தியக்கலைஞர்கள், நடுவர்கள், அறிவிப்பாளர்கள் அனைவரும் தாயக விடுதலை செயற்பாட்டாளர்களாலும், கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்களாலும், அமைப்புக்களின் பொறுப்பாளர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.
2011ம் ஆண்டின் சங்கொலி விருதினை பெற்றுக்கொண்ட சற்குணன் கிருசுணதாசன் அவர்கள் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளரினால் மதிப்பளிக்கப்பட்டார். அவருடன் கடந்த ஆண்டு சங்கொலி விருதினை பெற்றுக்கொண்ட திரு. முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு தனது வாழ்த்துதலை தெரிவித்திருந்தார். சிறப்பாக தமிழில் பாடிய மெறிசியசு பெண்மணி அவர்களும் மதிப்பளிக்கப்பட்டார். அவர் தமிழிலும், ஆங்கிலத்திலும் நன்றியை தெரிவித்து தமிழ்மொழி எனது உயிர், விடுதலை எனது மூச்சு, கட்டாயம் தமிழீழம் பிறக்கும் என கூறி மக்களின் பல கரகோசத்தைப்பெற்றுக்கொண்டார்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியீட்டியவர்கள் விபரங்கள் முறையே அழகாக வெண்திரையில் தொழிநுட்பவியலாளர்கள் வெளிவரச்செய்திருந்தனர். நிகழ்வு முடிவில் எமது நினைவையும், கனவையும் நிறைவேற்ற உறுதி ஏற்றிக்கொள்ளும் பாடலான நம்புங்கள் தமிழீழ நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரம் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் உறுதிமொழியுடன் நிறைவு பெற்றது.
சங்கொலி 2011 வெற்றியீட்டியவர்கள் விபரங்கள் பின்வருமாறு
கீழ்ப்பிரிவு
1 வது இடம் சிறுமி . சிறிதரன் ஆரபி
2 வது இடம் சிறுமி . தெய்வேந்திரன் கரிகரணி
3 வது இடம் சிறுமி . சிவரூபன் எழிலினி
மத்தியபிரிவு
1 வது இடம் தேவசுதன் மானசீகா
2 வது இடம் மோகனதாசன் அகிம்சா
3 வது இடம் குணராஐh சஞ்சீவ்
வெற்றிவேல் குமரன் ஆர்த்தி ( இருவர் )
மேற்ப்பரிவு
1 வது இடம் சோதிராசா சோனா
2 வது இடம் திலீப்குமார் திசானிகா
3 வது இடம் கோகுலதாசன் சூர்யா
அதிமேற்பரிவு
1 வது இடம் புலியாட்சி சிறிகாந்தன்
2 வது இடம் நவநீதன் நிந்துலன்
3 வது இடம் குணராஐh சஐPனா
அதிஅதி மேற்பிரிவு
1. சற்குணன் கிருசுணதாசன்
2. இராசலிங்கம் றொசான்
3. கணேசமூர்த்தி சஞ்சீவன்
சிறப்புப்பிரிவு
1. ஆறுமுகம் ஓவிந்தராசா
2. மீராவதி குப்தன்
3. வெற்றிவேல் அருள்மகள்
2011ல் சிறந்த பாடகருக்குரிய சங்கொலி விருதினை திரு. சற்குணன் கிருசுணதாசன்
அவர்கள் பெற்றுக்கொண்டார்.
- கலைபண்பாட்டுக்கழகம் - பிரான்சு
No comments:
Post a Comment