7/2/2011 10:15:49 AM
வில்லேஜ் தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.முருகானந்தம் தயாரித்துள்ள படம், 'வாகை சூட வா'. விமல், இனியா, பாக்யராஜ், தம்பி ராமய்யா, பொன்வண்ணன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஓம்பிரகாஷ். இசை, எம்.ஜிப்ரான். பாடல்கள்: வைரமுத்து, அறிவுமதி, கார்த்திக் நேத்தா, வே.ராமசாமி. ஏ.சற்குணம் இயக்குகிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் பாக்யராஜ் பேசியதாவது:
சினிமாவில் ஜெயிக்க கடின உழைப்பு முக்கியம் என்று நினைத்திருந்தேன். சில சம்பவங்களுக்கு பிறகு நேரம்தான் முக்கியம் என்று உணர்ந்து கொண்டேன். 'களவாணி' படத்தில், முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சாந்தனுவுக்குதான் வந்தது. பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, விமல் ஹீரோ என்றார்கள். சற்குணம் வேறொருவர் மூலம், 'பாக்யராஜை கோபித்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்' என்று, சொல்லி அனுப்பினார்.
இதற்குமுன் 'சுப்ரமணியபுரம்' படத்திலும் சாந்தனு ஹீரோவாக நடித்திருக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியாமல் போனது. இப்படி, சில நல்ல வாய்ப்புகள் சாந்தனுவுக்கு அமையவில்லை. எல்லாம் நேரம்தான் காரணம் என்று நினைத்தேன். இப்போது சற்குணம் 'வாகை சூட வா' படத்தில் என்னை நடிக்க கேட்டபோது, அந்த வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்று ஒப்புக்கொண்டேன். இதற்கும் நேரம்தான் காரணம். சினிமாவில் ஜெயிக்க நேரம் ரொம்ப, ரொம்ப முக்கியம். இவ்வாறு பாக்யராஜ் பேசினார். பாரதிராஜா, வைரமுத்து, அமீர், பாண்டிராஜ், சிம்புதேவன், பிரபு சாலமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் முருகானந்தம் வரவேற்றார். சற்குணம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment