விசா மோசடி காரணமாக பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா மற்றும் படக்குழுவினர் 12 பேரை கொரியா அரசு சிறைப்படுத்தியுள்ளது.
பிரபல கவர்ச்சி நடிகை பபிதா மகள் லக்ஷா. இன்றைக்கு முன்னணி கவர்ச்சி நடிகையாக உள்ளார். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்.
'லாலி' என்ற புதிய படத்தில் நடிக்க லக்ஷாவை ஒப்பந்தம் செய்தனர். இதில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சித்திரைச் செல்வன், பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பையும் லக்ஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் தென்கொரியாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.
இதற்காக லக்ஷா மற்றும் நடிகர்கள், நடன கலைஞர்கள் என 'லாலி' படக்குழுவினர் 13 பேர் தென் கொரியா புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களுடன் துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 30 பேர் டெல்லியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். தென் கொரியாவில் 4 நாட்கள் லக்ஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது டெல்லியிலிருந்து இவர்களுடன் போனவர்கள் திடீரென மாயமானார்கள். லக்ஷா உள்ளிட்ட சென்னையில் இருந்து சென்ற அனைவரும் இந்தியா திரும்ப நேற்று கொரியா விமான நிலையம் சென்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் 13 பேரையும் அங்குள்ள ஓட்டலில் சிறை வைத்தனர். வெளியே போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டார்கள்.
29 பேரும் வராவிட்டால் விசா மோசடியின் கீழ் லக்ஷா உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று தென்கொரியா போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஆசாமிகள் 29 பேரும் யார்? லக்ஷா படக்குழுவினருடன் துணை நடிகர்கள் பெயரில் எதற்காக கொரியா வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது.
அந்த நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்காக படக் குழுவினர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் இந்த குற்றம் அதிகமாக நிகழ்கிறது. எனவே இந்த 29 பேரையும் கண்டுபிடித்து கொடுக்காமல் நாடு திரும்ப விடமாட்டோம் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
மகள் லக்ஷா வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்ததும் தாய் பபிதா கதறி அழுதார். தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் போனை ஆஃப் செய்து வைத்துள்ளதாக பபிதா தெரிவித்தார்.
பிரபல கவர்ச்சி நடிகை பபிதா மகள் லக்ஷா. இன்றைக்கு முன்னணி கவர்ச்சி நடிகையாக உள்ளார். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்.
'லாலி' என்ற புதிய படத்தில் நடிக்க லக்ஷாவை ஒப்பந்தம் செய்தனர். இதில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சித்திரைச் செல்வன், பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பையும் லக்ஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் தென்கொரியாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.
இதற்காக லக்ஷா மற்றும் நடிகர்கள், நடன கலைஞர்கள் என 'லாலி' படக்குழுவினர் 13 பேர் தென் கொரியா புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களுடன் துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 30 பேர் டெல்லியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். தென் கொரியாவில் 4 நாட்கள் லக்ஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது டெல்லியிலிருந்து இவர்களுடன் போனவர்கள் திடீரென மாயமானார்கள். லக்ஷா உள்ளிட்ட சென்னையில் இருந்து சென்ற அனைவரும் இந்தியா திரும்ப நேற்று கொரியா விமான நிலையம் சென்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் 13 பேரையும் அங்குள்ள ஓட்டலில் சிறை வைத்தனர். வெளியே போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டார்கள்.
29 பேரும் வராவிட்டால் விசா மோசடியின் கீழ் லக்ஷா உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று தென்கொரியா போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஆசாமிகள் 29 பேரும் யார்? லக்ஷா படக்குழுவினருடன் துணை நடிகர்கள் பெயரில் எதற்காக கொரியா வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது.
அந்த நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்காக படக் குழுவினர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் இந்த குற்றம் அதிகமாக நிகழ்கிறது. எனவே இந்த 29 பேரையும் கண்டுபிடித்து கொடுக்காமல் நாடு திரும்ப விடமாட்டோம் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.
மகள் லக்ஷா வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்ததும் தாய் பபிதா கதறி அழுதார். தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் போனை ஆஃப் செய்து வைத்துள்ளதாக பபிதா தெரிவித்தார்.
No comments:
Post a Comment