தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த நபரொருவரை வெட்டிக் கொன்றதுடன் மனைவிக்கும் பலத்த காயமேற்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை வத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தேகம பொல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டவராவார்.
கொலையுண்டவரின் சடலத்தில் சுமார் 15 வெட்டுக் காயங்கள் காணப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையுண்ட குறித்த இளைஞர் இரவு நேரத்தில் தனது மனைவியைச் சந்திப்பதற்காக இரகசியமாக வந்திருந்த போதே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இவரது மனைவி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment