விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் உங்கள் வீட்டில் உள்ளன. தகவல் கிடைத்து சோதனை இடவந்துள்ளோம் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்த நகை கள், பணம் ஆகியவற்றைச் சூறையாடிச் சென்றுள்ளனர்.
இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சி சித்திவிநாயகர் வீதி உதயநகர் மேற்கில் இடம்பெற்றது.கிளிநொச்சி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் கே.கணேசன் என்பவரின் வீட்டில் நடந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
இரவு 8 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள் 5 பேர் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டு உரிமையாளரின் கழுத்தில் வாளை வைத்து உங்கள் வீட்டில் விடுதலைப் புலி உறுப்பினர் செழியன் ஆயுதங்களை மறைத்து வைத்துள்ளார். தகவல் கிடைத்து சோதனையிட வந்துள்ளோம் என்று மிரட்டினர். வீட்டில் இருந்த ஏனையோரை சத்தம் போடாமல் அப்படியே நில்லுங்கள் எனக்கூறி விட்டு வீட்டை சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். அவ்வேளை வீட்டில் பாவனைக்கு இருந்த தொலை பேசி ளின் சிம்களைக் கழற்றி வீசினர். ஏனைய பொருள்களையும் அடித்து உடைத்து நாசப்படுத்தினர்.
வாள், கொட்டன்கள், கத்தி என்பவற்றுடன் வந்திருந்த ஆயுததாரிகள் 13 பவுண் தங்கநகைகள், ஐயாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை மட்டுமே சூறையாடினர்.பொலிஸில் முறைப்பாடு செய்தால் கொலை செய்து விடுவோம் என்று எச்சரித்து விட்டே அவர்கள் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.அண்மைக் காலமாக கிளி நொச்சிப் பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.குறிப்பாக வட்டக்கச்சி, பன்னங்கண்டி, பெரியபரந்தன் ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் அண் மைக்காலத்தில் நடந்துள்ளன.இதனால் கிளிநொச்சி பிரதேச மக்கள் தாம் இரவுப் பொழுதை அச்சத்துடனேயே கழித்து வரு வதாகத் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment