எங்களை விட்டு எங்கு சென்றாய்....?
தானைத் தலைவனின் தம்பியே
தமிழ் ஈழத்தின் புன்னகை செல்வனே
எங்களை விட்டு எங்கு சென்றாய்..?..
போர்க்களத்துலும் நீ வீரன்..!
புன்னகையிலும் நீ மன்னன்.. !
நீ சிரித்தால் பூமி சிரிக்கும்
நீ இல்லை என்று தமிழ் இனம் அழுகிறது
தமிழ் ஈழம் பெற்றெடுத்த தமிழ் செல்வனே
தாயகத்தை விட்டு எங்கு சென்றாய்..?
கார்த்திகை கரி நாள் வந்ததுவோ
காலனே உனக்கு கண் இல்லையோ
எங்கள் செல்வனை ஏன் பிரித்தாய்..?
தமிழ் ஈழ செல்வனே வானத்தில் இருந்து பாருங்கள்
என்றோ ஒரு நாள் மலரும் தமிழ் ஈழத்தின் ஒளி தெரியும்..


No comments:
Post a Comment