அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத்திற்குள்ளிருக்கும் நகரில் நடத்தப்பட்டுள்ள இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் எம்மை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களிலிருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக கலாசார பொருளாதார அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வா தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பெருந்தலைவராவார். மலையக தமிழர்களின் குடியுரிமை பறிப்பிற்கு எதிராக கிளர்ந்து எழுந்தவர். ஈழத்து காந்தி என்று போற்றப்படும் தந்தை செல்வாவின் சிலை அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
இன்று ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் பல்வேறு பேரினவாத அனர்த்தங்களைப்பற்றி தந்தை செல்வா அன்றே தீர்க்கதரிசனமாக எடுத்துக்கூறியிருக்கின்றார்.
இத்தகைய உன்னதமான தலைவரின் சிலை இன்று திருகோணமலையிலே உடைக்கப்பட்டிருக்கின்றது.
இது தமிழ் மக்களின் சாத்வீக சிந்தனைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.என்றும் மனேகணேசன் தெரிவித்துள்ளர்.
No comments:
Post a Comment