இன் நிகழ்வில் அந்த நகரத்தில் உள்ள தமிழ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொன்டு 20 ஆண்டுகளுக்கு முன் யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராக இருந்தபோது நெடுஞ்சாலை விபத்தொன்றில் மாவீரரான மேயர் சுரேந்தி,நாட்டுப்பற்றாளர் குஞ்சன்,நாட்டுப்பற்றாளர் சவுந்தி மற்றும் அவரின் மனைவி பிள்ளை அனைவருக்கும் தங்கள் அகவணக்கத்தைத் தெரிவித்தனர்.
இன் நிகழ்வில் அவரால் ஆரம்பித்துவைக்கப்பட்டு இன்று பல கலைஞர்களை உள்ளடக்கி பெருவிருச்சமாக வளர்ந்து நிற்கும் தமிழீழம் இசைக்குழுவின் இசைவணக்கம் இடம்பெற்றது. அக்கலைஞர்கள் அவருடன் வாழ்ந்த காலத்தை ஒவ்வொரு பாடலின் போதும் மீட்டிப்பார்த்தமை மிகவும் சிறப்பாக அமைந்தது.
அவரால் தமிழீழவிடுதலைக்காக இயற்றப்பட்டு தமழீழம் இசைக்குழுவினரால் இசையமைக்கப்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. அதைவிட இன்று யேர்மனியில் தமிழ்மக்களுடைய தமிழ்கல்வி மையமாக வளர்ந்து நிற்கும் தமிழ் கல்விக்கழகம் அவரால் ஆரம்பிக்கப்பட்டு அந்தக் காலத்திலேயே யேர்மனிய சட்டத்துக்குள் பதிவுசெய்தமை அவரின் தூரநோக்கம் கொண்ட செயற்பாடுகளில் ஒன்றாகும்.
பின் நடனங்கள்,வீணையிசை,மற்றும் சிறப்புரை என்பன இடம்பெற்றது. மேயர் சுரேந்தி அவர்களுடன் இணைந்து செயலாற்றிய முன்சன்கிளட்பாக்கைச் சேர்ந்த சீலன் அவர்கள் அவருடன் இணைந்து பணிசெய்த காலங்களை நினைவுகூர்ந்து சிறப்புரை ஆற்றினார்.
No comments:
Post a Comment