கூடப் பிறந்த தனது இரு தங்கைகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டுத் தலைமறைவாகிய அண்ணனைக் கைது செய்யும் நடவடிக்கையில் தொம்பே பொலிஸார் ஈடுபட்டுளளனர்.தனது பதினொரு வயதான தங்கையை ஒரு வருட காலமாகவும் ஆறு வயதான மற்றத் தங்கையைக் கடந்த இரு மாத காலமாகவும் இவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் என தொம்பே பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இவரது இரு சகோதரிகளும் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தொம்பே - மாலித - கப்புகொட பிரதேசத்தில் இச்சம்பவம் பதிவாகி உள்ளது.
No comments:
Post a Comment