பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்:-
2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே சர்வதேச சட்டத்தின்படி நாங்கள், நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் அணிதான் வெற்றிபெறப் போகிறது. நாங்கள் மத்தியிலே ஆட்சி அமைப்போம். (இப்போது பேசுறதெல்லாம் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா). அதே சர்வதேச சட்டத்தின்படி நாங்களும் இலங்கைக்கு இந்திய படையை அனுப்பி, அங்குள்ள தமிழர்களுக்கு தனி நாடு அமைத்து தருவோம் என்றார்.
இப்போது நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் இப்பொழுது கொண்டு வாருங்கள். உங்களுக்கு தயக்கம் இருந்தால் எங்கள் கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு அவர்களை ஒரு தீர்மானத்தை கொண்டு வரச் சொல்லுகிறோம். அதை நீங்கள் ஆதரியுங்கள்.
1997 பிப்ரவரி 1ஆம் தேதி ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி மாநாடு 5 லட்சம் பேர் பங்கேற்ற மாநாட்டை சென்னையில் நடத்தினோம். இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளை விட்டால் தமிழ்நாட்டில் இவர்களை உயர்த்தி பிடிக்க வேறு யார் இருக்கிறார்கள்.
ஆண்ட கட்சிகள், ஆளும் கட்சிகள், வேறு கட்சிகள் சொல்லட்டும். நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் துணிந்து சொல்லமாட்டார்கள். திருமாவளவன் சொன்னதைப்போல் தமிழ்நாட்டு அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி எந்த நிலையிலும் தமிழை பாதுக்க வேண்டும். தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டும். தமிழ் ஈழத்தை பெற்றே தீர வேண்டும். அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளோடு எந்தவித போராட்டத்திற்கும் இந்த இரண்டு கட்சிகளையும், கட்சிகளின் தொண்டர்களையும் தொடர்ந்து தயார் படுத்தி வந்திருக்கின்றோம். அதனுடைய வெளிப்பாடுதான் திருமாவளவன் தனது இன்னுயிரையும் விட தயாராக இருந்தார்கள். நான் சென்றுதான் இன்னும் நாம் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது என்று கூறி, அந்த உண்ணாவிரத்தை நிறுத்துமாறு நான் வேண்டுகோள் வைக்க, அவரும் அதனை ஏற்று அந்த உண்ணாவிரத்தை நிறுத்தினார்.
இதைப்பற்றியெல்லாம் சிலர் விமர்சிக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். தமிழ் ஈழமே தீர்வு. அதற்காக எந்த விலை கொடுக்கவும் இந்த இரண்டு இயக்கமும் தயாராக இருக்கிறது என்றார்.


No comments:
Post a Comment