கனேடிய தேசியக்கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து தமிழீழ கொடிக்கீதம் இசைக்கப்பட்டது. அடுத்த தாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகைதந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது அஞ்சலியையும் வணக்கத்தையும் தெரிவித்தனர். இதன் பின்னர் மாணவர்களால் ஓழுங்குசெய்யப்பட்ட எழுச்சி நடனங்கள் பேச்சுக்கள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்றன.
பெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு. இந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.
இதனை தொடர்ந்து பின்வரும் நாட்களில் பல்கலைகழகங்கள் மாவீரர் நாட்களை முன்னெடுக்கவுள்ளன...
நவம்பர் மாதம் 18 ஆம் திகதி University of Toronto Mississauga
நவம்பர் மாதம் 20 ஆம் திகதி Canadian High Schools
நவம்பர் மாதம் 21 ஆம் திகதி McMaster University
நவம்பர் மாதம் 23 ஆம் திகதி Durham College/University of Ontario Institute of Technology
நவம்பர் மாதம் 23 ஆம் திகதி University of Toronto St. George
நவம்பர் மாதம் 23 ஆம் திகதி University of Waterloo
நவம்பர் மாதம் 25 ஆம் திகதி
அனைத்து கனடிய பலகலைகழகங்கள், கல்லூரிகள் மற்றும் பாடசாலைகளுடன் இணைந்து தமிழ் இளையோர் அமைப்புமுன்னெடுக்கும் மாபெரும் அரங்கில் மாவீரர் நினைவெழுச்சி வார தொடக்க நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment