எனது தந்தையும், முன்னாள் பேட்மின்டன் வீரருமான பிரகாஷ் படுகோனேவின் பெயர் பாரத ரத்னா விருதுக்கு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா. அந்த விருதுக்கு யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆள் ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(25). ஆனால் அவர் பரிந்துரைக்கும் நபர் வேறு யாருமில்லை அவரது தந்தையும், பிரபல முன்னாள் பேட்மின்டன் வீரருமான பிரகாஷ் படுகோனே.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது தந்தை தனது வாழ்க்கையை பேட்மின்டனுக்காக அர்பனித்தவர். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பேட்மின்டனை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை என் தந்தையைச் சேரும். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர் அவர் தான்.
அக்ஷய் குமார், சித்ராங்கடா சிங் ஆகியோருடன் சேர்ந்து அவர் நடித்த தேசி பாய்ஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.
கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திராத சாதனைகள் எல்லாம் படைத்துள்ள சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என பலர் பரிந்துரைத்தும் அவருக்கு இந்த விருது கொடுக்கவில்லை. அதற்கு காரணம் விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்க முடியாது என்பது தான். இந்த விஷயம் தீபிகாவுக்கு தெரியாதா என்ன?
நாட்டின் உயரிய விருது பாரத ரத்னா. அந்த விருதுக்கு யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆள் ஆளாளுக்கு ஆலோசனை கூறுகின்றனர். அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே(25). ஆனால் அவர் பரிந்துரைக்கும் நபர் வேறு யாருமில்லை அவரது தந்தையும், பிரபல முன்னாள் பேட்மின்டன் வீரருமான பிரகாஷ் படுகோனே.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனது தந்தை தனது வாழ்க்கையை பேட்மின்டனுக்காக அர்பனித்தவர். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பேட்மின்டனை இந்தியாவில் பிரபலப்படுத்திய பெருமை என் தந்தையைச் சேரும். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர் அவர் தான்.
அக்ஷய் குமார், சித்ராங்கடா சிங் ஆகியோருடன் சேர்ந்து அவர் நடித்த தேசி பாய்ஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.
கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திராத சாதனைகள் எல்லாம் படைத்துள்ள சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் என பலர் பரிந்துரைத்தும் அவருக்கு இந்த விருது கொடுக்கவில்லை. அதற்கு காரணம் விளையாட்டுத் துறைக்கு பாரத ரத்னா வழங்க முடியாது என்பது தான். இந்த விஷயம் தீபிகாவுக்கு தெரியாதா என்ன?
No comments:
Post a Comment