வவுனியா நகர்ப் பகுதியிலுள்ள வீடியோ கடையொன்றில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச புகைப்படங்களை விற்பனை செய்த மூவர் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடியோ கடையில் இருந்து ஆபாச புகைப்படங்கள் அடங்கிய கணினியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment