மன்னாரில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்து 1990 ஆம் ஆண்டு தலை மன்னாரில் இருந்து இடம் பெயர்ந்த 600 தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் மீண்டும் தலை மன்னாரில் மீளக் குடியமர்வ தில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இடம்பெயர்ந்த நிலையில் வேறு மாவட்டங்களில் பல் வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த அந்த மக்கள் மீண்டும் தமது சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலைமன்னார் பாடசாலை வீதியில் உள்ள தமது காணி யைத் துப்புரவு செய்து வந்தனர்.
தலைமன்னார் பாடசாலை வீதியில் 600 தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சுமார் 130 ஏக்கர் நிலப் பரப்பை அந்த மக்களே பொருளாதார நெருக்கடிக ளுக்கு மத்தியில் ஒற்றுமையா கத் துப்புரவு செய்து வந்தனர்.ஆனால் கடந்த சில தினங் களுக்கு முன்னர் காணியை அந்த மக்கள் துப்புரவு செய்து கொண்டிருந்த போது தலை மன்னார் பொலிஸார் அந்தப் பகுதிக்குள் செல்லத் தடை விதித்ததோடு துப்புரவு செய் யும் வேலைத் திட்டத்தையும் இடைநிறுத்தினர்.
இதனால் மக்களுக்கும் அவர் களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. பின்னர் குறித்த காணிப் பகுதியைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்தக் காணியை காணி சீர்திருத்த ஆணைக்குழு பொறுப் பேற்றதைத் தொடர்ந்தே அந்த மக்களை அக் காணிகளில் குடிய மர தடை விதிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.இதனால் அந்த மக்கள் பெரிதும் மனமுடைந்த நிலையில் காணப் படுகின்றனர்.பல நாள்களாக தலை மன்னாரில் உள்ள உறவி னர்களுடைய வீடுகளிலும் பள்ளிவாசல்களிலும் மரநிழல் களிலும் வாழ்ந்து வந்த அந்த மக்கள் இனி நாம் எங்கு செல்வது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
பின் இடம்பெயர்ந்த நிலையில் முஸ்லிம் மக்கள் தலை மன்னார் பியரில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 12 ஆம் திகதி மாலை தஞ்சமடைந்தி ருந்தனர். அப்போது அங்கு சென்று அந்த மக்களை அமைச் சர் றிஸாட் பதியுதின் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மெல்லும் சென்றிருந்தார்.கடந்த காலங்களில் இடம் பெற்ற தேர்தலின் போது அரசுக்கு முஸ்லிம் மக்களாகிய நாங்களும் பூரண ஆதரவை வழங்கிவந் தோம். ஆனால் எங்களுடைய மீளக்குடியமர்வில் அரசு பாரபட் சம் காட்டி வருவதோடு எமது காணிகளை அபகரித்துக் கொள்ள நினைக்கின்றமை எவ்வகை யில் நீதி? என அந்த மக்கள் கேள்வி யெழுப்பு கின்றனர்
No comments:
Post a Comment