வேலூர்: அதிமுக ஆட்சியில் திமுகவினர் பொய் வழக்கு போடுவதாக நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர் ஜே.கே.ரித்திஸ் குமார் தெரிவித்துள்ளார். போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரித்தீஷ். சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற விவசாயி ஜே.கே. ரித்தீஷ் மீது நிலம் அபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரும், நில அபகரிப்பு விசாரணை பிரிவு போலீசாரும் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை மைலாப்பூரில் உள்ள வீட்டில் இருந்த ரித்தீஷை கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
ரித்தீஷ் எம்.பி. மீது இந்திய தண்டனை (சட்டம் 465 போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல்), 467 போலி ஆவணம் தயாரித்தல்), 468 (போலி ஆவணத்தை உண்மை என்று காட்டுதல், 471 (நம்பிக்கை மோசடி) 420 (மோசடி), 109 (குற்றச்செயல் புரிதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்குப்பின் பகல் 12 மணி அளவில் ஸ்ரீ பெரும்புதூர் மாவட்ட மாஜிதிரேட்டு கோர்ட்டில் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 30ந் தேதி வரை 15 நாட்கள் வேலூர் ஜெயிலில் காவலில் வைக்கும்படி மாஜிஸ் திரேட்டு அப்துல் மாலிக் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வேலூர் ஜெயிலுக்கு ரித்தீஷ் கொண்டு செல்லப்பட்டார். வேலூர் சிறை வாசலில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் திமுக நண்பர்கள் பலரை கைது செய்துள்ளது. போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது. பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நானும் ஒருவன். சட்டத்தின் முன் நின்று பொய் வழக்கை உடைத்து வெளியே வருவேன். திமுக தலைவருக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார். இதன் பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரித்தீஷ். சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்த அவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுரை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தை சேர்ந்த சாமிக்கண்ணு என்ற விவசாயி ஜே.கே. ரித்தீஷ் மீது நிலம் அபகரிப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீசாரும், நில அபகரிப்பு விசாரணை பிரிவு போலீசாரும் புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை மைலாப்பூரில் உள்ள வீட்டில் இருந்த ரித்தீஷை கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
ரித்தீஷ் எம்.பி. மீது இந்திய தண்டனை (சட்டம் 465 போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றுதல்), 467 போலி ஆவணம் தயாரித்தல்), 468 (போலி ஆவணத்தை உண்மை என்று காட்டுதல், 471 (நம்பிக்கை மோசடி) 420 (மோசடி), 109 (குற்றச்செயல் புரிதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்குப்பின் பகல் 12 மணி அளவில் ஸ்ரீ பெரும்புதூர் மாவட்ட மாஜிதிரேட்டு கோர்ட்டில் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 30ந் தேதி வரை 15 நாட்கள் வேலூர் ஜெயிலில் காவலில் வைக்கும்படி மாஜிஸ் திரேட்டு அப்துல் மாலிக் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வேலூர் ஜெயிலுக்கு ரித்தீஷ் கொண்டு செல்லப்பட்டார். வேலூர் சிறை வாசலில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் திமுக நண்பர்கள் பலரை கைது செய்துள்ளது. போலீசாரை கொண்டு பொய் வழக்கு போடுவதால் திமுகவினரை அடிபணிய வைக்க முடியாது. பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நானும் ஒருவன். சட்டத்தின் முன் நின்று பொய் வழக்கை உடைத்து வெளியே வருவேன். திமுக தலைவருக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார். இதன் பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment