கடாபி தினமும் 5 பெண்களுடன் “செக்ஸ்” உறவு கொண்டார் என அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். லிபியா முன்னாள் அதிபர் கடாபி கடந்த மாதம் புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அங்கு அவரது 42 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், தற்போது கடாபி குறித்த தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. அவர் “செக்ஸ்” பிரியர். அந்த விஷயத்தில் மிகவும் பலகீனமானவர். கடாபி தனது பாதுகாவலர்களாக பெண்கள் படையை அமைத்திருந்தார். அதில் பணியாற்றிய இளம் பெண்களுடன் அவர் “செக்ஸ்” உறவு வைத்திருந்தார். தினமும் 5 பெண்களுடன் அவர் உறவு கொண்டார். அதற்கு விலையாக அவர்களுக்கு விலை உயர்ந்த மாளிகைகளையும், அதிக அளவில் பணமும் வழங்கினார். இதன் மூலம் அந்த பெண்கள் வசதி படைத்தவர்கள் ஆனார்கள்.
இந்த தகவலை கடாபியின், உதவியாளர் பைசல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “செக்ஸ்”சில் அதிக ஈடுபாடு இருக்க தினமும் வீரிய மாத்திரைகளை கடாபி சாப்பிட்டு வந்தார். அந்த மாத்திரைகளின் அளவை குறைத்து கொள்ளும்படி அவருக்கு நெருக்கமான உக்ரைன் நர்சு வலியுறுத்தி வந்தார். ஆனால், அதை கடாபி கேட்கவில்லை. தன்னுடன் செக்ஸ் உறவு கொள்ளும் பெண்களிடம் அவர் கொடூரமாக நடந்து கொண்டார். எனவே, காயம் அடைந்த பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தன்னை அழகுப்படுத்தி கொள்வதிலும் கடாபிக்கு அலாதி பிரியம் உண்டு. முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்களை மறைக்க மேக்அப் சாதனங்களை பயன்படுத்தினார். மேலும் பச்சை தேயிலையையும் மருந்தாக உபயோகித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment