
நவராத்திரியின் இறுதி நாளான இன்று புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, இந்துசமய கலாசார அலுவல்கள் திணக்களத்துடன் இணைந்து பாராளுமன்றத்தில் இன்று சரஸ்வதி பூஜையை நடத்தியது.
இந்தப் பூஜையில் பிரதி சபாநாயகர், சிரேஷ்ட அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான அஸ்வர், அப்பாத்துரை விநாயக மூர்த்தி,சந்திரகுமார் உட்பட சில எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.
இன, மத பேதமின்றி பாராளுமன்றத்தில் வருடாந்தம் நடத்தப்படும் இவ் வாணிவிழா பூஜைக்கு எந்தவொரு தமிழ் அமைச்சரும் கலந்து கொள்ளவில்லை.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலைநிகழ்வொன்றும் இடம்பெற்றது.







No comments:
Post a Comment