உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.காரைக்குடியில் பிரச்சாரத்தில் பேசிய விஜயகாந்த்,
விஜயகாந்த் பணத்தை வாங்கிக் கொண்டு இருந்து விடுவார் என சொன்னார்கள். சேலம் மாநாட்டில் நீங்கள் சொன்னதைத்தான் இன்று செய்திருக்கிறேன். நான் பெத்த பிள்ளைகள் இரண்டு. ஒரு பிள்ளை படிக்கிறான். ஒருபிள்ளை நடிக்கிறான். எனக்கு அரசியலில் வந்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
காரைக்குடி கண்ணதாசன் பிறந்த ஊர். கோப்புடையம்மன் கோவில் முன்பு இருந்து கூறுகிறேன். ஓட்டுப்போடாவிட்டால் சாமி கண்ணை குத்தும். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:
Post a Comment