அபரணை காட்டு பிரதேசத்தில் தன்னந்தனியாக ஒரு லொறியை ஓட்டிச் சென்ற சாரதி திடீரென்று யானையை பார்த்து லொறியை நிறுத்தி அந்த யானை வீதியிலிருந்து காட்டுக்கு செல்லும் வரை அமைதியாக காத்துக் கொண்டிருந்தார்.
பொதுவாக வீதி யின் நடுவில் நின்று கொண்டிருக்கும் யானைகள் வீதியில் வாகனங்களை கண் டால் பதட்டமடை யாமல் காட்டுக்குள் சென்றுவிடும். ஆனால் இந்த யானை அவ்விதம் செய்யாமல் லொறியை
நோக்கி வேகமாக வந்து அதனை தாக்க முற்பட்டது.
அதுவொரு பழைய லொறி என்பதனால் யானைக்கு அந்த லொறியை சேதப்படுத்த முடியாததால், தனது தும்பிக்கையை லொறி சாரதி அமர்ந்திருக்கும் ஆசனத்திற்கு நுழைத்து சாரதியை வெளியிலிழுத்து கொல்ல முயற்சித்தது.
தைரியசாலியான சாரதி மறுபக்கத்திற்கு சென்று யானையின் தும்பிக்கையை இறுக்கமாக பிடித்து அதற்கு வேதனையை ஏற்படுத்தக் கூடிய வகையில் தும்பிக்கையை சுத்தியலால் அடித்திருக்கிறார். அதனால் வேதனை தாங்க முடியாத அந்த யானை பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற பெரியோரின் கூற்றுப்படி அங்கிருந்து வாலை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment