சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய பெண்ணை, இலங்கையரான ஒருவர் தனது வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இது ஒரு குற்றம் என அந் நாட்டு நீதிமன்றம் அறிவித்ததுடன், இக் குற்றவாளிக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனையோடு 90 கசையடியும் வழங்குமாறு தீர்பளித்துத் தண்டனை முடிவுற்றதும் அவரை நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் பெண்ணுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் தெரிவிக்கையில், மேற்படி இலங்கைப் பணிப் பெண்ணுக்கு, தான் மனிதாபிமான முறையில் உதவியதே தவிர, அவருடன் எவ்விதமான உறவையும் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.
அப் பணிப்பெண்ணுக்கு உதவிய குற்றத்துக்கே இவ்வளவு தண்டனை எனும் போது, உறவு கொண்டிருந்தால்...?
இப் பெண்ணும் தற்போது கைது செய்யப்பட்டு பெண்கள் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டுப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க நம் நாட்டில் நடக்கும் குற்றச்செயல்கள் அந் நாட்டில் நடைபெறும் பட்சத்தில் அங்கு வழங்கப்படும் தண்டனைகள் எவ்வாறு அமையும் என்பதை மேற்படி சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.
இந்த வகையில் இலங்கையில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனெனில் ஒரு பெண்ணுக்கு உதவியது குற்றம் எனத் தீர்பளிக்கப்பட்டுத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் பாலியல் வல்லுறவை மேற்கொண்டு விட்டுக் கொலையும் செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றார்கள்.
அதனால்தானோ என்னவோ இலங்கை சுதந்திரமான, ஜனநாயக நாடு என அரச தரப்பால் சொல்லப்பட்டு வருகின்றது போல...!
No comments:
Post a Comment