தொம்பே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அனைத்துப் பொலிஸாரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் வேறு பொலிஸ் குழு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தொம்பே பொலிஸ் நிலையத்தில் இதுவரை கடமையற்றி வந்த அனைத்துப் பொலிஸாரும் கம்பஹா தலைமைப் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தப் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டமையும் தெரிந்ததே. தொம்பே பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தமையையடுத்து அந்தப் பிரதேசத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment