கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்திற்க்கும் கனகாம்பிகைக் குளத்திற்க்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பு இராணுவ ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதற்கான நிலையமொன்றை அமைப்பதற்கென இராணுவத்தினரால் கையகப் படுத்தப்பட்டுள்ளது.
யுத்த்திற்க்கு முன்னய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் பண்ணையாக பயன்படுத்தப்பட்ட பகுதியையும் உள்ளடக்கியதாக கனகாம்பிகை அம்மன் ஆலயத்தின் பின் வீதியையும், கோவில் நிலங்களையும் உள்ளடக்கியதாக இந்த நிலப்பகுதி பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரம்பக்காலம் தொடக்கம் இன்றுவரையில் பயன்படுத்தப்பட்ட போர் ஆயுதங்கள் பல காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதற்கட்டமாக பிடிக்கப்பட்ட நிலத்தினுள் இரண்டு யுத்தத்தாங்கிகளும், 3ஆட்லறி பீரங்கிகளும் கொண்டு வந்து விடப்பட்டுள்ளன. எனினும் இந்தப்பகுதியில் கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றும், சாந்தபுரம் உள்ளிட்ட இரணைமடுக்குளத்தை அண்டியுள்ள பகுதி மக்களால் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த கிணறொன்றும் அதனுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் பிடிக்கப்பட்ட பகுதிக்குள் வாழ்ந்த சில மக்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ள நிலத்திற்க்கு வேலிகள் போடப்பட்டு இந்தப்பகுதி இராணுவத்தினருக்கு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஏ9 வீதிக்குக் கிழக்கே திருமுறிகண்டி பிரதேசத்தில் ஒரு பகுதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் சொந்தக்காணிகளுக்கான ஆவணங்களை வைத்திருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலும், உறவினர் நண்பர் வீடுகளிலும் தெடர்ந்தும் தங்கியிருக்கின்றனர். இது குறித்து பலதடைவை பலதரப்பிரனரையும் சந்தித்தபோதும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதேபோல் மக்களுடைய நிலங்களில் இராணுவ முகாம்களும், பயன்தரு மரங்கள் அழிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment