பிரித்தானியாவின் முக்கிய எதிர்கட்சியான தொழில் கட்சி நாடாளுமன்ற, மற்றும் நிழல் அமைச்சர்களுடன் தமிழர்கள் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்று நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றுள்ளது. தெழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு (Tamils for Labour) இதனை ஒழுங்கு செய்திருந்தது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிழல் அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டனர்;. இதில் சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணக் காட்சிகள், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருக்கும் தமிழ் அகதிகள், மற்றும் இலங்கையின் தற்போதைய நிலை குறித்து முக்கியமாகக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் அலக்ஸ்ஸான்றா எம்.பி உட்பட பல முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்கள், லேபர் கட்சியின் பல முக்கிய நிழல் அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment