பொதுவாக இம்மாதிரி சிறப்புக் காட்சிகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களுக்குத்தான் பெரிய அளவில் நடக்கும்.
ஆனால் பாலா என்ற படைப்பாளிக்காக மட்டுமே, ரஜினி படத்துக்கு இணையான முக்கியத்துவம் அவன் இவனுக்குத் தரப்பட்டது. சென்னை ஏஜிஎஸ் மல்டிப்ளெக்ஸில் நடந்த இந்தப் படத்தின் பிரிமியர் ஷோவில், ஒட்டுமொத்த சினிமா உலகமே பங்கேற்றது என்றால் மிகையல்ல.
இயக்குநர் பாலா, கல்பாத்தி எஸ் அகோரம், அவன் இவன் நாயகிகள் மதுஷாலினி, ஜனனி, இயக்குநர்கள் வெற்றி மாறன், ராஜேஷ், ஹரி, சசி, மனோபாலா, பாண்டியராஜன், ‘எத்தன்’ சுரேஷ், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, ஜெயம் ரவி, பிரசன்னா, சினேகா, விவேக், பரத், திஷா பாண்டே, விதார்த், நாசர், சரண்யா பொன்வண்ணன், கவிஞர் நா முத்துக்குமார், அருண்விஜய் உள்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.
அனைவரையும் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம் வரவேற்றார்.
No comments:
Post a Comment